Wednesday, May 24, 2017

பர்ஸான் முகம்மது-சம்மாந்துறை

தீரதம் - வயது வந்தவர்களுக்கு மட்டும்!
                             Farzan Mohamed 

வாலிபம் குறையாத வார்த்தைகளை கையாளும் எழுத்தாளன் ஒருவர் தனக்கு வயதாகி விட்டதாக பேச்சுக்கு சொல்லிக் கொள்வார். அவர் தான் 'தீரதம்' சிறுகதைத் தொகுதியின் தாயும் தந்தையுமான தீரன் ஆர்.எம்.நௌஸாத் அவர்கள்.
வெறுமனே வார்த்தைகளை கோர்த்து கதைகளாகவும் கவிதைகளாகவும் விற்கின்ற எழுத்தாளர்களிடையே சற்று வித்தியாசமாக இவர் வார்த்தைகளை ரசித்து நீள அகலம் புரிந்து கதைகளை வடித்து தன்னை அதனுள் உலாவ விட்டு வாசகர்களுக்கு தன்னையே விற்பனை செய்கிறார். காரணம் அவர் பாணியில் கதை சொல்லி வேண்டும் என்பதற்காய்.
நான் ஒவ்வொரு முறையும் சொல்வதுண்டு; தமது பிரதேச வழக்கு சொற்களை பயன்படுத்தி இலக்கியம் படைப்பதாலும் அநாகரீகமான விடயங்களைக் கூட நாகரீகமாக சொல்லி ரசிக்க வைப்பதனாலும் என் போன்ற பலர் இவரையும் இவரது இலக்கியங்களையும் அதிகம் நேசிப்பதுண்டு.
இங்கு தீரதம் சிறுகதைத் தொகுதியிலே மொத்தமாக 10 சிறுகதைகளை வாசிப்பிற்கு சமர்ப்பிக்கிறார். இவரது கதைகளை படிக்கையில் எனக்கு தோன்றுவதெல்லாம் "ஏனைய எழுத்தாளர்கள் எழுத மறந்த விடயங்களை நேரம் ஒதுக்கி இவர் கவனிக்கின்றாரா இல்லை ஏனையவர் துணியாத விடயங்களில் இவர் துணிகின்றாரா..." என்பதே.
இங்கு ஒவ்வொரு கதையும் வெவ்வேறு வடிவங்களை வெளி்ப்படுத்துகின்றன. இவ்வாறும் சிறுகதைகள் இருக்கலாம் என இவரது சிறுகதைகள் பிரச்சாரம் செய்கின்றன.
இத் தொகுதியிலே 'மறிக்கிடா' எனும் ஒரு கதை உண்டு, அதைப் படித்த போது என்னை அறியாமலேயே அவையில் சிரித்து விட்டேன். மேலும் 'கள்ளக் கோழி' கதையை படித்த போது சமூக எதார்த்தத்தை உணர முடிந்தது. 'ஒய்த்தா மாமா' கதை என் இளமைக் காலத்தை மீட்டிப் பார்க்கச் செய்தது. அது எந்தளவெனில் அக்கதையை படித்து முடித்து விட்டு சாய்ந்திருந்து இருபது வருடங்கள் எனை பின்னோக்கி அழைத்துச் சென்றேன். இது தான் தீரனின் உத்தி.
நான் கதைகளைப் பற்றி; அவற்றின் சாராம்சத்தை ஒரு போதும் சொல்லப் போவதில்லை. ஏனெனில் நீங்கள் முழுவதுமாக அவற்றை நுகர வேண்டும் என்பதற்காகவே. நான் சொல்வதற்கும் குசும்பன் தீரன் சொல்வதற்கும் பல இடைவெளி உண்டு.
நான் படித்து முடித்த கையோடு என் தோழி ஒருத்தி தீரதம் தொகுதியை வாசிப்பிற்கு பற்றிக் கொண்டாள். மூன்று மணி நேரம் கழித்து எனை தொலைபேசியில் அழைத்து "வளிசல்... என்னடா புத்தகம் இது..." என்றாள். நான் "சிறுகதைப் புத்தகம்" என்றேன். பிறகு "படித்தாயா... எவ்வாறு உள்ளது..." என்றேன். அதற்கவள் "மறிக்கிடா தலைப்பு வித்தியாசமாய் இருந்தது. படித்துப் பார்த்த போது தான் உனதும் தீரனதும் ரசனை புரிந்தது..." எனச் சொல்லி அழைப்பை முடித்துக் கொண்டாள்.
நல்ல வேளை 'கள்ளக் கோழி'யை அவள் படிக்கவில்லை போலும்!
*
நான்,
முஹம்மது பர்ஸான்.
சம்மாந்துறை.
23.05.2017
Issath Rehana, Sajeeth . ஆர்.எம் நௌஷாத் மிக்க நன்றிகள் தம்பி பர்சான்... விழாவுக்கு வந்து ...தந்து இதைப் பகிர்ந்து கொண்டமைக்கு....உன் தோழி '' வளிசல்... என்னடா புத்தகம் இது..." என்றாளே அந்த சொல்லில் தீரன் வாழ்கிறான். Basith தீராத பசியோடு நானும் காத்திருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் ஊர்வந்ததும் கள்ளக்கோழியை பிடித்திவிடுவேன். கவிப்பூவரசர் பர்சான் உம் தீரதத்தையும், தீரதத்தையும் பக்குவமாய் வைத்துக்கொள்ளும் நாவாற ருசிக்கும் வண்ணம்... பெண் தோழியிடம் தீரதத்தை வாங்கி சலவை போட்டு வையும், தொற்றுக்கள் தொற்றாதிருக்க...med கண்டிப்பாக உங்களை தீரனிடம் அனுப்பி குணப்படுத்த வேண்டும். உமது பசியை அவர் மட்டுமே போக்கக்கூடியவர். உம்முடையது தீராத இலக்கியப் பசியல்லோ...றிந்தவர் நீர்மட்டும்தான் என்பதையானறிவேன்... அதைபோல் என்தீனி யாதென்பதையும் நீரறிவீர்...தீரதத்தை தயார்படுத்தும்...தீராப்பசியுடன் நான் தயார்..ரசனைக் குறிப்புகள்- தீரன் ஆர் எம் நெளஸாத்தின் தீரதம் மண லில் விளையாடித் திரியும் அரைநிஜார் பையன், வாயில் நாவூற மாமரத்திற்கு கற்களால் எறிகிறான், மாங்காய் விழுகிறத...See More Mahdy Hassan Ibrahim கள்ளக்கோழி கொழும்பு வரட்டும்! ஒரு கடி கடிக்கிறேன்! ஆர்.எம் நௌஷாத் பலபேரும் கடிச்சிக் கடிச்சி வெறும் முள்ளுத் துண்டுகள்தான் மிச்சம் மஹ்தி 🤣arzan Mohamed எலும்பென்டாலும் கள்ளக் கோழிட போல வருமா என்னsmailjalal Mohamed Ismail Deeranin kiramiya sol valam.....rompa piramadam....ithuvaraium nam pahuthil veru yaraium kallappa....
ns
Rahmathullah Str எங்கவாப்பா புத்தகம் #வெள்ளிவிரல்லயே என் விரலும் ஒருசாதியா ஆனிக்கி....
இதையும் குடுப்பா...


No comments:

Post a Comment