ரசனைக் குறிப்புகள்- தீரன் ஆர் எம் நெளஸாத்தின் தீரதம்
மணலில் விளையாடித் திரியும் அரைநிஜார் பையன், வாயில் நாவூற மாமரத்திற்கு கற்களால் எறிகிறான், மாங்காய் விழுகிறது, பரணுக்குள் ஒளித்து உப்பு தடவி சாப்பிடுகிறான்- இந்த சுகானுபவம் இருக்கிறதே, ஆஹா ஆஹா ஆஹாஹா, அதே அனுபவத்தைத் தந்தது தீரனின் தீரதம்.
வெறித்தனமான வர்ணனை இல்லை, வெட்டிப்பேச்சு இல்லை. ஒவ்வொரு சம்பவக் கோர்வையையும் ஒவ்வொரு கறுப்பு வெள்ளை புகைப்படமாக எடுக்கலாம், கனகச்சிதமாக மனதில் நிற்கிறது.
தீரனின் முகத்தில் மோனாலிசா ஓவியத்தைப் போல் எப்போதும் ஒரு ஹாஸ்யப் புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கும், அந்த அங்கதம் கதையில் நுழைந்தால் எப்படியிருக்கும்? கதை முடியவும் குபீரென்று சிரிப்பால் அதிர்ந்து விடுகிறோம்,
தீரன் நீங்கள் இப்பதி கிராமிய மரபுகளை கதையில் கொண்டுவரும் தனித்த ஆளப்பா!
பிரதேச நகைச்சுவை உணர்வை மிக நேர்த்தியாக கதையில் கொண்டு வருகிறீர்கள், சொல்லட்டா? மலையகத்தில் மிக அழகாக இருப்பதற்கு பசுந்தா இரிக்கீங்க என்று சொல்வார்கள்.
தீரன் உங்கள் மொழிநடை பசுந்தா இருக்கிறது, உங்கள் பேச்சுவழக்கு பசுந்தா இருக்கிறது, உங்கள் நடையழகு பசுந்தா இருக்கிறது,
அப்படியென்றால் கொஞ்சோணும் போல இருக்குது,
தீரன் ஐயா, நூல் தளக்கோலத்திலும் இன்னும் சற்று கவனம்
செலுத்தினால் நன்று போல் தோன்றுகிறது, வாழ்த்துகள்
0
தீரன். ஆர்.எம் நௌஷாத் சொர்க்கபுரி சங்கதிகள் புனைவுகள் மூலம் தென் கிழக்கு சிறுகதை உலகுக்கு ஒரு புதிய பரிணாமம் தந்தவர் நீங்கள் ...............நாம எதோ பழைய கறுப்பு வெள்ளைப் பாட்டுப் படிக்கிற ஆட்கள்...உங்களிடமிருந்து இப்படி ஒரு ரசனைக் குறிப்பு கிடைத்திருப்பதே ஒரு பெரிய அங்கீகாரம் என எண்ணி மகிழ்கிறேன்....வேலைப்பளுக்களின் மத்தியிலும் வந்து கனமான அன்பளிப்பும் தந்து கௌரவித்தமையை என்றென்றும் நன்றியுடன் நினைத்திருப்பேன் டொக்டர்...
Kattankudy Fouz தீரன் நௌஸாத் இலக்கிய
உலகில் பேசப் பட வேண்டிய ஒருவர். காரணம் அவரின் கற்பனை வளம்! தமாஸ்...
சீராக சிந்திக்கின்ற மனோ பாவம்! பழைமையை ஓரம்...See More
Adam Iyoobkhan அருமை,,,,தீரனின் முகத்தில் மோனாலிஸா ஓவியத்தைப் போல் எப்பொழுதும் ஒரு ஹாஸ்யப் புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கும் ,,,.,
Farzan Mohamed அருமை டொக்டர்...
உமது மென்மையான குணம் போலவே உமது விமர்சனமும் இதமாக உள்ளது. உமது நூலில் இன்னும் 5 கதைகள் பாக்கி உள்ளது. விரைவில் நாம் அது பற்றி உரையாடுவோம்
No comments:
Post a Comment