கிழக்கிலங்கைக்கென்று ஒரு தனியான இலக்கியச்சுவை இருக்கிறது.அது மண்வாசனையா? மொழி நளினமா? பாத்திரங்களின் உயிர்ப்புத்தன்மையா? எழுத்தாளர்களின் தனித்தன்மையா? ஏதோ ஒன்று நம்மை கட்டியிழுத்து அந்த எழுத்துக்களின் காலடியில் போட்டு விடுகிறது.
தீரரின் "தீரதம்" படிக்கும் போதும் ஏதோ பக்கத்து வீட்டுக்காரியுடன் நம் உள் வீட்டு யன்னலுக்குள் நின்று பேசுவது போல் அத்தனை இயல்பாய் இருக்கிறது.அதீத கற்பனைக்கெல்லாம் இடமில்லாது கதைகள் நம்மைச்சுற்றியே ஆட்டுக்குட்டியாட்டம் மேய்கிறது.
நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாது, சிலேடைகளுக்கும் சிக்கனமில்லாது,
மனிதகுலத்தின் யதார்த்தங்களையும், சமூகப்பரப்பின் ஆழங்களையும் பலவீனங்களையும் மிக அழகாகப்பேசுகிறது தீரதத்தின் பத்து சிறு(பெருங்)கதைகளும்.
மனிதகுலத்தின் யதார்த்தங்களையும், சமூகப்பரப்பின் ஆழங்களையும் பலவீனங்களையும் மிக அழகாகப்பேசுகிறது தீரதத்தின் பத்து சிறு(பெருங்)கதைகளும்.
கபடப்பறவைகளும்,அணிலும், ஆத்துமீனும் படிக்கையில் கண்களின் ஓரம் கரிப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை...தீரரே உமது பாசமான இலக்கிய நட்பு கிடைத்தமைக்காய் பெருமிதம் கொள்கிறேன்....
-தொடரும்-
-தொடரும்-