Saturday, April 22, 2017

வழிமொழிவு— பேராசிரியர். றமீஸ் அப்துல்லாஹ்;.

வழிமொழிவு—   

பேராசிரியர். றமீஸ் அப்துல்லாஹ்;.







சமூகங்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவதில் இலக்கியங்களுக்கு முக்கிய பங்குண்டு. ஈழத்தில் தமிழ் பேசும் இரு சமூகமானதமிழர்களும் முஸ்லிம்களும் தமதுஅடையாளத்தைவெளிப்படுத்துவதற்கு இலக்கியத்தைமுக்கியசாதனமாகப் பயன்படுத்திஉள்ளனர். ‘மரணத்துள் வாழ்வோம்’ என்றகவிதைத் தொகுதி ஈழத்துத் தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்தமானபோராட்டவலியைவெளிப்படுத்துவதாகஅமைந்தது. இதேபோன்று‘மீசான் கட்டைகளில் மீளஎழும் பாடல்கள்’ என்றதொகுதி போராட்டத்தின் உக்கிரத்திற்குள் நசுங்குண்ட முஸ்லிம்களின் வலியைவெளிப்படுத்தியது. அதேநேரம்தொகுதிகளாகவெளிவராவிடினும் 1980களுக்குப் பின்னர் ஈழத்தில் வெளிவந்தபெரும்பாலானசிறுகதைகள் அவ்வச் சமூகஅடையாளத்தைவெளிப்படுத்துவதில் பெரும் பங்குவகித்தன.

1950களில் அ.ஸ.கிழக்கிலிருந்து சிறுகதைஎழுத முனைந்தபொழுது வேறொருவிதமான நெருக்கடியைச் சந்தித்தார். தமிழகசஞ்சிகைகளுக்குஅவர் எழுதியசிறுகதைகளில் இருந்த இங்குள்ளஊர்ப்பெயர்களும் ஆட்பெயர்களும் திருத்தப்பட்டுத் தமிழகப் பாணியிலே வெளிவந்தது. ஈழத்துச் சுதேசஉணர்வுகளுடன் எழுதப்பட்ட அவரது கதைகள் செங்கல்பட்டுவாகவும் ஆபீசாகவும் தலைமைக்குமாஸ்தாவாகவும் திருநெல்வேலிச் சந்தியாகவும் மாற்றப்பட்டவரலாறுஉண்டு. அதுபோக ஷரிஆ சம்பந்தப்பட்டபிரச்சினைகளைக் கதைக் கருவாகக் கொண்டுஅவர் சிலகதைகளைஎழுதியவரலாறும் உண்டு. இந்தத் தொடர்ச்சிபோக 1980களில்தான் தமதுசொந்தசமூகஅடையாளங்களை இயல்பாகவும் வேண்டுமென்றும் தமதுகதைகளுக்குள் கொண்டுவரநமதுஎழுத்தாளர்கள் முனைந்தனர்.

இந்தவரிசையில் சாய்ந்தமருதைச் சேர்ந்த தீரன் ஆர்.எம். நௌஸாத் ‘வல்லமைதாராயோää‘வெள்ளிவிரல்’  என்ற இரு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டவர். இவரது பிந்திய சிறுகதைத்தொகுதியில் இனப்பிரச்சினை தொடர்பான பல்வேறுகதைகள் வெளிவந்தபோதும் முஸ்லிம் சமூகம் சார்ந்த சிலகதைகளும் வெளிவந்தன. அதேபோன்று இத் தீரதம் என்ற தொகுதியில் வெளிவந்தகதைகளும் இனப்பிரச்சினை சார்ந்ததும் சமூக அடையாளங்களை வெளிப்படுத்தும் கதைகளாகவும்அமைந்துள்ளன.

அதேநேரம் ‘நட்டுமைää’ ‘கொல்வதெழுதுதல் 90’ ஆகிய இரண்டு நாவல்களையும் தீரன் எழுதியுள்ளார். கிழக்கில் நாவல் துறையின் வளர்ச்சி  மிகவுமே போதுமானதல்ல. அவ்வாறு இருப்பினும் இவ்விரு நாவல்களையும் முக்கியமான நாவல்களாகக் கொள்கிறபோதும் இதனுள் உள்விழுந்து பார்க்கிறபோது விமர்சனரீதியாகச் சிலகேள்விகளை எழுப்பவேண்டிய தேவையிருக்கிறது. அதேபோன்று தீரதம் என்ற இத்தொகுதியில் வெளிவந்தசிறுகதைகள் சிலவற்றைப் பற்றியும் சிலகேள்விகள் எழுப்பவேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாகக் கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் அனுபவங்கள் இந்தக் கதைகளில் பதிவாகியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.

‘ஒய்த்தாமாமா’ää‘பொன்னெழுத்துப் பீங்கான்ää தீரதம்.  முதலானகதைகள் முஸ்லிம் சமூகம் சார்ந்த மிகமுக்கியமான கதைகள். இப்போதைய சிறுவர்களுக்கு ஒய்த்தாமாமா பற்றிய அனுபவம் இருப்பதில்லை. ஒய்த்தாமாமாவின் வேலைகள் எல்லாவற்றையும் வைத்தியர்கள் பாரமெடுத்துக்கொண்டார்கள். முஸ்லிம்களிடம் சாதிஉண்டா என்று கேட்பவர்களுக்கு ஒய்த்தாமாமா  ஓர் ஆதாரமாக அமையக்கூடும். ஆனால்ääஅந்தச் சமூகக் கட்டுமானத்தைப் பற்றி தீரன் சொல்லவரவில்லை என்று நினைக்கிறேன். அதேநேரம ;ஒய்த்தாமாமாவைப் பற்றிய ஒரு பதிவினை தீரன் மிகஅற்புதமாகக் கொண்டுவந்திருக்கிறார்.

‘பொன்னெழுத்துப் பீங்கான்’ லண்டனுக்குச் சென்ற தன் மகளின் செய்தியை அறியவிரும்பும் தாயின் ஏக்கத்தைவெளிப்படுத்துகின்ற ஒரு  நல்லகதை. அவள் பக்கத்தில் ஒரு  வெள்ளைக்காரனோடு நின்று எடுக்கப்பட்டஒரு புகைப்படப் படத்தைக் கண்டவுடன் அந்தத் தாய்க்கு ஏற்பட்ட மனஉணர்வு மிகஅற்புதமாக இந்தக் கதையில் வருகிறது. புலிகளினால் கொலைசெய்யப்பட்டதன் கணவர் ஒரே பீங்கானிலே–பொன்னெழுத்துப் பீங்கானிலே சாப்பிட்ட கதையை அந்தத் தாய் இக்கதையில் விபரிக்கிறாள்.

“அப்படிப்பட்டஎனக்கிப் பொறந்தஒனக்கிட்டயும் அந்தப் பொன்னெழுத்துப் பீங்கான்தான் இரிக்கிம்..அதுலநீஆரையும் சாப்பிடஉடமாட்டாய் ண்டும் எனக்கித் தெரியிம்..ண்டாலும் புள்ளே..எண்டமனம் கெடந்துஅல்லாடுது.. ஒடன இந்த கெசட்டுப் பீசக் கேட்டஒடனே… நாட்டுக்குப் பறந்துவாடா என்டகண்டுமகளாரே! நீ வெராட்டி என்ட மய்யத்துலதான் முளிப்பாய்.. செல்லிட்டன்.. வல்லபெரியநாயன் ஒனக்கு ஒதவி செய்யட்டும்.. ஆமின்… ம்க்க்க்க்..ம்ம்ம்.

கிராமிய உணர்வு ததும்பும் இக்கதையில் பொன்னெழுத்துப் பீங்கான் இங்கு ஒரு குறியீடாக வருவதாகவே நான் உணர்கிறேன். இக்கதையிலும் முஸ்லிம் உணர்வு சார்ந்த வியாக்கியானம் ஆங்காங்கே வருகிறது.

தீரதம் என்பது இறைகாதலை வெளிப்படுத்துகிற மிகமுக்கியமான ஒருகதை. சூபி இசம் சார்ந்த இக்கதை பழைய மெய்ஞ்ஞான பாடல்களின் இன்னுமொரு வியாக்கியானமாக உரைநடையில் வந்த ஒன்றாகவேநான் நோக்குகிறேன். புதுமைப்பித்தன் முதலான பலசிறுகதை ஆசிரியர்களும் இந்தத் தத்துவார்த்தரீதியான ஆன்மீகம் சார்ந்த கதைகளை எழுதியிருக்கிறார்கள். அவ்வகையில் முஸ்லிம்கள் சார்ந்த ஆன்மீகரீதியான உணர்வினை வெளிப்படுத்துகிற மிகஎளிய ஒருகதையாகவே  தீரதம் கதையைக் கொள்ளலாம்.

கிராமிய அனுபவங்களைக் கூறுகிற அதுவும் கிழக்குப் பிரதேச கிராம அனுபவங்களைக்  கூறுகிற ஒரு நல்லகதை ‘மறிக்கிடா. ஆனால்ää இக்கதையைப் பொறுத்தவரையில் மாற்று இனப் பாத்திரங்கள் கதையாகி இருப்பது நமது இன உறவுக்கு அப்பாலே முரண்படத்தக்க கேள்விகளையும் எழுப்பக்கூடும். இப்படியான கதை சொல்லுகிறபாங்கு ஈழத்துச் சிறுகதை மரபிலே உண்டு. மிகக் கவனமாக இந்தமாற்று இனப் பாத்திரங்களைக் கையாள்வதில் ஆசிரியர்கள் மிகப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தேவையிருப்பதாகவும் நான் உணர்கிறேன்.

‘அணில்’ இன ரீதியான விவகாரங்களை வெளிப்படுத்துகிற ஒருமுக்கியமான நல்லகதை. இதேபோன்று புதியஉத்தியில் அமைந்த இன விவகாரங்களைக் கையாள்கிற மற்றுமொருகதை  ‘காக்காமாரும் தேரர்களும்’ இக்கதை வெறும் செய்திகளைத் தொகுத்துச் சொல்வதாக இருந்தாலும் ää

”இதெல்லாம் ஒருசிறுகதையா?’ என்று முகத்தில் வீசினார் பத்திரிகைஆசிரியர். இதெல்லாம் சிறுகதையல்ல.. பெரும்பெரும் கதைகள்.. என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன். –

இக்கதையிலுள்ள‘பெரும்பெரும் கதைகள்’ என்றசொல்லின் மூலமே இச்சிறுகதையின் முழு அர்த்தத்தையும் ஆசிரியர் வெளிக்கொண்டுவருகிறார். இவ்வகையான கதைகளை தீரன் முன்னரும் எழுதியுள்ளார். ‘மும்மான்’ என்றகதையும் இன ரீதியான விவகாரங்களை வெளிப்படுத்துகிற நல்லகதை.

இலக்கியக்காரர் ஒவ்வொருவருக்கும் அவரவர் வீட்டிலே இருக்கிற பிரச்சினைகளை ஒரு அற்புதமான உத்தியோடு அணுகியிருக்கிற ‘கபடப்பறவைகள்’ என்ற கதை சுவாரசியமானதுதான்.

மேலும்சில கதைகளோடு அமைந்த இந்த தீரதம். என்ற தொகுதி ஒருநல்ல சிறுகதை ஆசிரியன் ஆர்.எம். நௌஸாத் என்பதற்கு மிகப் பெரும் சான்றாகும். நல்ல படைப்புக்களை வாசிக்கின்றபோது இன்னும் இன்னும் செழுமைபெற்ற நல்லகதைகள் வந்துசேரும். அதுமாத்திரமன்றி இந்தக் கதைகளைச் செப்பனிடச் செப்பனிட இன்னும் நல்லகதைகள் வந்துசேரும். நௌஸாத்தின் கதைகள் புதியஅனுபவங்களைத் தருகிற நல்லகதைகள் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. தீரதம் ஆசிரியருக்கு நமது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் என்றும் உண்டு.


கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ்

தலைவர்.. மொழித்துறைää
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
ஒலுவில்- சிறிலங்கா.
2016.11.10

முன்மொழிவு----தி. ஞானசேகரன்

முன்மொழிவு----தி. ஞானசேகரன்





படைப்பிலக்கியத் துறையில் எழுத்தாளர் ஆர். எம். நௌஸாத் வெளியிடும் ஏழாவது நூல் இது.  ஏற்கனவே தமிழ்நாடு காலச்சுவடு இதழ் நடத்திய சுந்தரராமசாமி 75 இலக்கியப்போட்டியில்; பரிசுபெற்ற  ‘நட்டுமை’ நாவல்ää கொல்வதெழுதல் 90 நாவல்ää அரச சாகித்தியப் பரிசு பெற்ற ‘வெள்ளிவிரல்’ சிறுகதைத் தொகுதிää ‘வல்லமை தாராயோ’ சிறுகதைத் தொகுதி ஆகியவை வாசகர்களின் பார்வைக்குக் கிடைத்துள்ளன.

தற்போது உங்கள் கைகளில் தவழும் ‘தீரதம்’ என்ற இந்தச் சிறுகதைத் தொகுதிக்கான கதைகளை அனுப்பிää “எனது இலக்கிய முயற்சிகளில் ‘ஞானம்’ ஒரு பலமான பாதையை அமைத்துத் தந்ததுää ஒரு பெரிய உந்து சக்தியாக விளங்கியது. ஞானம் ஆசிரியர் என்ற முறையில் இந்தச் சிறுகதைத் தொகுதிக்கு ஒரு முன்னுரை எழுதித் தாருங்கள்” என எழுதியிருந்தார் நௌஸாத்.

தன்னடக்கத்துடன் அவர் இவ்வாறு எழுதியிருப்பினும்ää அவரது திறமைகளே அவரை ஓர் சிறந்த எழுத்தாளனாக உயர்த்தியிருக்கிறது. ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியொன்றில் ‘மீள் தகவு’ என்ற கதைக்கு மூன்றாம் பரிசினைப் பெற்றதன் மூலம்; ‘ஞானம்’ வாசகர்களுக்கு அறிமுகமான அவர் தொடர்ந்தும் ஞானம் சஞ்சிகை வருடாவருடம் நடத்திய போட்டிகளில் முதற்பரிசு உட்படப் பலபரிசுகளைப் பெற்றுத் தனது திறமைகளை நிரூபித்ததன் மூலம் எழுத்துலகில் தனது பலமான பாதையை வகுத்துக்கொண்டார். அவர்பெற்ற பரிசுகளும் அங்கீகாரங்களுமே அவருக்கு உந்து சக்தியாக விளங்கின.

நௌஸாத் என்னிடம் முன்னுரை கேட்டதுää என்மேல் அவர் கொண்டுள்ள அபிமானத்தால் என்னைக் கௌரவப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே தவிர வேறேதுமில்லை  என்பதை நான் உணர்கிறேன்.

இத்தொகுதியில் உள்ள ‘ஒய்த்தா மாமா’ää ‘கள்ளக் கோழி’ää ‘இ~;க்’ (தீரதம்) ஆகிய கதைகள் ஞானத்தில் வெளியானபோது வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.தான் வாழும் சமூகத்தின் மீதான பண்பாட்டு அம்சங்களையும் விழுமியங்களையும் சமூகக் கட்டமைப்பின் பல்வேறு கூறுகளையும் அவதானித்து அவற்றை உணர்வு பூர்வமாகச் சித்திரிப்பதில் நௌஸாத் வல்லவராக இருக்கிறார்.

இத்தொகுதியில் உள்ள முதலாவது கதையான ‘ஒய்த்தா மாமா’வை அவர் ஆரம்பிக்கும் விதமே அலாதியானது. பாசாங்கற்றää அர்த்தம் செறிந்த பழகு சொற்களை கலையழகோடு ஒழுங்கமைத்து வாசகர் உள்ளங்களில் ஓர் ஒட்டிழுப்பை அவர் ஏற்படுத்திவிடுகிறார்:

“எனக்குப் பத்து வயதிருக்கும்போது அது நடந்தது.. ஒய்த்தா மாமாவைக் கண்டாலே எனக்குப்பயம். அவர் சிறுவர்களின் குஞ்சாமணியை தயைதாட்சண்யமின்றி அறுத்தெறிகிறவர் என்று கேள்விப்பட்டதிலிருந்து இந்தப்பயம். இது நிச்சயமாக நமக்கும் எப்போதோ நடக்கத்தான் போகிறதென்று உணர்ந்ததிலிருந்து அவரைக்கண்டாலே குலை நடுக்கம்தான். அப்படி இவர் குஞ்சாமணியை அறுத்தெறிகிறவர் என்றால்ää நம்மட வாப்பாää பெரியப்பாää பெரிய ஆம்பிளையள் எல்லாம் எப்படி ஒண்டுக்குப் போகிறார்கள் என்ற கேள்வி மண்டையைக் குடையும்…”  இப்படியாகத் தொடங்கிää தொடர்ந்து சுன்னத்துக் கலியாணம் எப்படி நடத்தப்படுகிறது என்ற செய்திகளையெல்லாம் விலாவாரியாகக் கதையில் ஆவணப்படுதியிருக்கிறார் ஆசிரியர். அவரது நுட்பமான பார்வையும்ää சொல்நேர்த்தியும் மிகவும் சுவாரஸ்யமாக  இக்கதையை நகர்த்திச் செல்கின்றன. சமூகம் சார்ந்த யதார்த்தப் பார்வையுடன்கூடிய விபரணை ஆசிரியரின் சிறப்பான சமூக அவதானிப்பைப் புலப்படுத்துவதாய் அமைந்துள்ளது.

‘கள்ளக் கோழி’ என்ற சிறுகதையில்ää கல்யாணம் ஆகி மூன்றே மாதத்தில்; கணவனும் மனைவியும பிரிய நேரிடுகிறது. கோபித்துக் கொண்டுபோன கணவனையும்; மனைவியையும் சேர்த்துவைக்க ஆத்தப்பா கிழவன் முயற்சி எடுக்கிறான்.

 “டே ஆத்தப்பாக் கௌவா.. ஒண்ட பேத்தியைப் பண்ணின நாள்ள இரிந்து என்ட மகனுக்கு யாவாரத்தல நட்டம்டா.. நமக்கு வள்ளா… குறி கேட்டுப்பார்த்துட்டம்; அவள வெலக்கினாத்தான் துசிவத்தும் வெலகுமாம். இனி இஞ்ச வராதடா கௌவா காத்திக் கோட்டுலதான் வழக்கு விளக்கம் எல்லாம்..” என மாப்பிள்ளையின் அம்மாக்காரி கூறிவிடுகிறாள்.வருடங்கள் இரண்டு ஓடிவிட்டன. வேறுவழியின்றி பேத்திக்கு கிழவன் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார். இந்த நிலையில் பேத்தி இரவில் மாட்டுத் தொழுவத்தில் இரகசியமாக ஓர் ஆடவனைச் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொள்கிறாள். இதனை  ஆத்தாக்கிழவன் அறிந்து கொள்கிறான். ஆனால் பேத்தியிடம் எதுவும் கேட்க வில்லை.  இரவில் தனது பேத்தியைக் காணவரும் அந்த ஆடவனை ஒளிந்திருந்து வெட்டிச்சாய்க்க அரிவாளுடன் வீட்டின் பின்புறத்திலுள்ள பெரப்பம் பத்தைக்குள் காத்திருக்கிறான் கிழவன்.

கதை முடிவை நோக்கிப் பின்வருமாறு நகர்கிறது ..‘அருவாள ஓங்க.. டோர்ச்சி லைற்று வெளிச்சத்துல அவண்ட சொத்தையப் பாத்த ஆத்தப்பா கௌவன் வெறைச்சிப் போய்ட்;டான். ஒடன அருவாக்கத்திய கீள போட்டுட்டான்ää வெக்கத்துல மெலச்சிப்போய் அப்பிடியே செல மாய்ரி நிண்டுட்டான்… அப்பிடியே குந்திட்டான்..
அந்தக் கள்ளக்கோழி யார் என்பது ‘கிளைமாக்ஸ்’.

வாழ்க்கையை யதார்த்தமாகப்படம் பிடித்துக்காட்டி நம் இதயங்களில் ஆழமாகப்பதிய வைக்கிறது இக்கதை. ஆசிரியரின் சமூக அனுபவம் இக்கதையைக் கட்டமைப்பதில் பெரிதும் உதவியிருக்கிறது. வாழ்வியலின் மெய்ம்மை இக்கதையில் வலுப்படுத்தப்படுகிறது. மானிடத்தையும் மானிட நடத்தை வேறுபாடுகளையும் மானிட நேயத்தையும் இக்கதை பிரதிபலிக்கின்றது.

‘பொன்னெழுத்துப் பீங்கான்’ என்ற சிறுகதையில் ஆசிரியர் சொல்லவரும் செய்தி மிகவலுவானது. சவரியத்தும்மாவின் புரு~ன் ஏகபத்தினி விரதன். பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன்.  சவரியத்தும்மாவுக்கு 26 ஆவது வயதாக இருக்கும்போது வயல்காவலுக்குச் சென்ற கணவன் புலிப்படையினரால் கொல்லப்படுகிறான். கைம்பெண்ணான  அவள் மறுமணம் செய்யாது தனது பத்து வயது மகளை வளர்த்து ஆளாக்குவதில் பெருமுயற்சி எடுக்கிறாள். மகளும் படித்து திறமையாகச் சோதனைகளில் சித்தியடைந்து அரசாங்கத்தினால் மேல்படிப்புக்கு லண்டனுக்கு அனுப்பப் படுகிறாள். அவ்வாறு சென்ற மகள் சிலகாலத்தின் பின் லண்டனில் இருந்து கடிதம் அனுப்புகிறாள். அத்துடன் தனது புகைப்படம் ஒன்றையும் சேர்த்து அனுப்புகிறாள். அந்தப்புகைப்படத்தில்;  ஒரு வெள்ளைக்காரனும் அவள் அருகிலே நிற்கிறான். அதனைக்கண்டு கலக்கமுற்ற சவரியத்தும்மாதனது மகளுக்கு அறிவுரை கூறுவதாக இச்சிறுகதை கட்டமைக்கப்பட்டுள்ளது. சவரியத்தும்மாää தான் கூறுவதை ஒரு ‘கெசட் பீஸில்’ பதிவு செய்து மகளுக்கு அனுப்புகிறாள்.
சவரியத்தும்மா தனது கணவனுடன் வாழ்ந்த காலத்தில்ää அவனால் அவளுக்குக் கூறப்பட்டதாக வரும் பகுதி இக்தையின் ஆணிவேர்:
“டியே.. சவரியத்து.. இந்தப் பொன்னெழுத்துப் பிங்கானில் மட்டுந்தாங்கா நான் சாப்டுற.. பலபல பீங்கானுகள்ள  சாப்பிடுற பளக்கம் எனக்கு ல்லடி.. நீ யான் என்ட பொன் னெழுத்துப் பிங்கான். ண்டு சொல்லி என்னைப் பார்த்து கண்ணைச் சிமிட்டிச் சிரிச்சாரேää வெளங்கிச்சா புள்ள  ஒனக்கு அது ஏணுன்டு.. அதனுட கருத்து என்னண்டு..? பெரிய இங்கிலிசி சிங்கில மெல்லாம் படிச்சிரிக்கிறியே.. இதர அர்த்தம் தெரியுமா நொக்கு…?
இதில் ஆசிரியர் சொல்லும் வாழ்க்கைக் கூறுகளை மிக உருக்கமாகவும் நேர்மையாகவும் சித்திரிக்கிறார். நமது பாரம்பரிய சமூகப் பெறுமானங்களின் சிறப்பை வெளிப்படுத்துகிறார். இச்சிறுகதையின் கதைப்பின்னலுக்கு அப்பால்; ஓர் உன்னத வாழ்க்கையைத் தரிசிக்க முடிகிறது.
 ‘குறியீட்டியம்’ ஒரு நேர்த்தியான கலைவடிவமாகும். அது சுவைஞனை சிந்திக்கவும் தேடல்செய்யவும் வைக்கிறது. ‘மும்மான்’ என்ற சிறுகதை எமது நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பான வரலாற்றை குறியீட்டுப்பாணியில் விபரிக்கிறது.
சிங்கள மக்களைச் சிங்கங்களாகவும்ää தமிழ்ப் போராளிகளை புலிகளாகவும்ää முஸ்லிம்களை முயல்களாகவும் உருவகித்துக் கதையை நகர்த்திச் செல்லும் ஆசிரியர்ää சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் நடுவே முயல்கள் அநியாயமாக அகப்பட்டுப் பேரழிவைச் சந்தித்த வரலாற்றைச் சித்திரிக்கின்றார். எதிர்காலத்தில் இந்தப் பேரழிவுகளிலிருந்து முஸ்லிம்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளää செய்ய வேண்டியது என்ன? என்ற கேள்விக்கு விடையிறுப்பதாக அமைகிறது இச்சிறுகதையின் முடிவு. ஆசிரியர்  சமூகத்துக்குச் சொல்ல வந்த செய்தியைக் கூறுவதற்கு போரியல் வரலாற்று நிகழ்வுகளைத் துணையாகக் கொண்டிருக்கிறார். மிகவும் கண்ணியமாகவும் நேர்மையாகவும் அழகுறச் சொல்லிச் செல்லும் அவரது முயற்சி பராட்டப்படவேண்டியது.

‘அணில்’ என்ற சிறுகதை பேசும் அரசியல் வித்தியாசமானது. இலங்கை அரசியல் வாதிகள் இனவாதம் பேசி அரசியல் நடத்தினாலும் இந்த நாட்டின் சாதாரணப் பொதுமக்கள் மத்தியில் உறவும் ஒற்றுமையும் நேயமும் இருக்கவே செய்கின்றன என்பதை இக்கதையிலே காண்கிறோம்.
நௌஸாத் தொழில் ரீதியாக ஒரு தபாலதிபகராகக் கடமையாற்றியவர். அவர் தனது நேரடி அனுபவங்களையே  கதையாக்கியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு  ‘அணில்’ என்ற கதையின் கதைக்களம்ää பாத்திரவார்ப்புää கதைச்சம்பவங்கள்ää சூழல் யாவும்  தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.

 பெரிய தபாலதிபர் வினாயகமூர்த்தி ஒரு யாழ்ப்பாணத் தமிழர். உதவித் தபாலதிபர் நஸீர் ஒரு முஸ்லிம். தபாற்சேவகன் இந்திக ஒரு சிங்களவர்.
பெரிய தபால் அதிபர் வினாயகமூர்த்தி யாழ்ப்பாணப் பேச்சு மொழியில் கறாராக அரசியல் பேசுவார்: ‘அடே நஸீர்…இந்திக்க கேளுங்கடா.. ஓமந்த கேம்ப எக்க அபே கொட்டி அற்றாக் கறன்ட வெலாவட்ட..(ஓமந்தைக் காம்பை எங்கள் புலிகள் தாக்கும்போது…) என்று புலிப்படைப் புகழ் பாடத்தொடங்கி ஸ்ரீ போராட்டம் தொடக்கம் தரப்படுத்தல் சட்டம்.. சிங்களம் மட்டும் சட்டம்… அதன் விளைவாக தமிழர் பாதிப்புகள்.. அதன் தொடர்ச்சியான போராட்டங்கள்ää அது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்த வரலாறு… என்றெல்லாம் தொடரவே நஸீரும் இந்திகவும் அணிலும் புன்னகைத்தபடி வேறுவழியின்றி வேண்டா வெறுப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இப்படியாகப் பேசுகின்ற தபாலதிபர்ää ஒருநாள் இந்திகாவை சாராயம் வாங்கக் கடைக்கு அனுப்பிவிட்டு அவன் அன்பாக வளர்க்கும் அணிலை வெட்டிக் கறியாக்கி விடுகிறார்.இதனை அறிந்த நஸீர் அதிர்ந்து போய்விட்டான்.
“இப்ப இந்திக வந்தான் எண்டால் என்ன நடக்கும்..? இங்க நடக்கப் போற கொலைக்கு நான் சாட்சியா இருக்க விரும்பேல்லை. திறப்பைப் புடிங்க ஐயா.. நான் வீட்டைபோறன்.. என்ன மடத்தனம் இது.. அவன்ட அணிலைப் புடிச்சி…பாவம் புண்ணியம் பாக்காம கொண்டு… சே… ஐயா கடைசியாச் சொல்லுறன் நீங்க இஞ்ச இருக்கிறது நல்லாயிருக்காது. டக்கெண்டு வெளிக்கிட்டு எங்கயாச்சும் போங்க…இல்ல என்னோட வாங்க.. அவன் இந்திகவிட அண்ணன்மார் ஆமில இருக்கான்.. அனுராதபுரத்தில் அறுத்து ஒரு மாதமாகல்ல… சே.. என்ன செய்யப் போறீங்க ஐயா..?
வீட்டுக்குச் சென்ற நஸீரால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. பெரியவர் கொலைசெய்யப் பட்டுவிடுவாரா என மனம் பதைபதைத்துக் கொண்டிருந்தது. இரவு தொலைபேசியில் பெரியவருடன் தொடர்புகொள்ள முயல்கிறான். எதிர் முனையில வெகுநேரமாகியும் பதிலில்லை.
கவித்துவமான உரைநடை கதையின் இலக்கியப் பெறுமானத்தை வலுவுடையதாக ஆக்கிவிடுகிறது.

கதைகளைக் கட்டமைப்பதில் ஆசிரியர் தேர்ந்தெடுக்கும் உத்திமுறைகள் பற்றியும் விசே~மாகக் குறிப்பிடவேண்டும். ‘ஒயத்தா மாமா’ சிறுகதை ஒரு சிறுவனின தற்கூற்றாக அமைந்துள்ளது.  ‘பொன்னெழுத்துப் பீங்கான்’  சிறுகதை ஒரு தாய் மகளுக்கு சி.டி.யில் தன் பேச்சைப்பதிவு செய்து தபாலில் அனுப்புவதாக அமந்துள்ளது. ‘மும்மான்’ குறியீடாகச் சொல்லப்படுகிறது. சில கதைகள் ஆசிரியர் கூற்றும் பாத்திரங்களின் உரையாடல்களுமாக வளர்க்கப்படுகின்றன.

“காக்கா மார்களும் தேரர்களும்” என்ற கதையில் ஆசிரியர் ஒரு புதிய உத்தியைக் கையாள்கிறார். இக்கதை பத்திரிகைச் செய்திகள் பலவற்றின் தொகுப்பாக அமைந்துள்ளது.  நமது நாட்டில் பிக்குகள் சிலர் தினம் தினம் முஸ்லிம்களுக்கு எதிராகப் பரப்பும் இனரீதியான செய்திகளும்ää முஸ்லிம் தலைவர்கள் சிலரின் நழுவல் போக்குகழும். ஆலிம் சபையினரின் இயலாமையும்ää முஸ்லிம் அமைச்சர்கள்; சிலரின் அறிக்கைகளும் செய்திக் கீலங்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் இனரீதியான துன்புறுத்தல்களையும்  அவற்றிற்கு ஏதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியாத கையறுநிலையையும் படம் பிடித்துக்காட்;;டும் ஆசிரியர்ää இக்கதைமூலம் ஒரு சமூக விளிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

இத்தொகுப்பில் உள்ள தீரதம்ää கபடப்பறவைகள்ää ஆத்துமீன்ஆசை ஆகிய கதைகளும் இலக்கியப் பெறுமானம் கொண்ட கதைகளே.

நௌஸாத்தின் சிறுகதைகளின் உயிரோட்டமான அம்சம் அவரது உரைநடை. அனுபவத்தைத் தொற்றவைப்பதற்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்த – உணர்ச்சிக் கூறுகள் நிறைந்த - அதேவேளை சமூக யதார்த்தத்திலிருந்து விட்டகலாத நடைச்சிறப்பு அவருடையது.

நௌஸாத் கதைசொல்லும் முறையில் ஒரு புதுமை இருக்கிறது. புதுப்புனல் ஊற்றின் குளிர்மைப் பிரவாகம் கொள்கிறது. அவருடைய சிறுகதைகளைப் படித்து முடித்ததும் அவைதரும் உணர்வுகள் படிப்பவர் மனதில் தொற்றி நிற்கின்றன.

மேலும் பல வெற்றிகள் எதிர்காலத்திலும் அவருக்குக் காத்திருக்கின்றன என்பதை இச்சிறுகதைத் தொகுதி கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளது. நௌஸாத்துக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

தி. ஞானசேகரன்

‘ஞானம்’ சஞ்சிகை பிரதம ஆசிரியர்
3-பிää 46ஆவது ஒழுங்கை
கொழும்பு -06
29-06-2016


உள்ளடக்கம்

தீரதம் தொகுதியுள் இடம்பெற்றுள்ள சிறுகதைகள்
--------------------------------------------

உட்பொழிவுகள்.

01           ஒய்த்தா மாமா. 
02           கள்ளக்கோழி
03           மறிக்கிடா.
04           பொன்னெழுத்துப் பீங்கான்.
05           அணில்.
06           தீரதம்.
07           காக்காமாரும் தேரர்களும்.
08           மும்மான்.
09           கபடப் பறவைகள்.
10           ஆத்துமீன் ஆசை.

தீரதம்

உள்ளடக்க விபரங்கள்

first edition- 2017 march

published- jeevanathy kalaiaham, alvai

 

 

உட்பொழிவுகள்.

 

01           ஒய்த்தா மாமா. 

02           கள்ளக்கோழி

03           மறிக்கிடா.

04           பொன்னெழுத்துப் பீங்கான்.

05           அணில்.

06           தீரதம்.

07           காக்காமாரும் தேரர்களும்.

08           மும்மான்.

09           கபடப் பறவைகள்.

10           ஆத்துமீன் ஆசை.

 

  

சமர்ப்பணம்

பாவலர் பஸில் காரியப்பர் அவர்களுக்கு

௦௦௦

 

நன்றிகள்

ஞானம்

வண்ண வானவில்

செங்கதிர்

தினக்குரல்

யாத்ரா

சருகு

தினகரன்

மை.நா

ஜீவநதி

அக்கினிக்குஞ்சு இணையம்

தமிழ் விழி இணையம்

எதுவரை..இணையம்

தடாகம்இணையம்

காற்றுவெளி  இணையம்

டொக்டர். தி. ஞானசேகரன்

பேராசிரியர் .ரமீஸ் அப்துல்லாஹ்

.பரணீதரன்

தம்பிலுவில்  ஜெகா

அஸ்மி காரியப்பர்

ஷிதான் அத்தாப்

 

 

நூலாசிரியர் அறிமுகம்

 

 -தம்பிலுவில் ஜெகா 

 

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAplVCjBq5B1fGqw1vmwXReTLxODYjl-RK3mirfAyryN4tUuN6Y51JQiMQjlbL_Vt7gx3lpihEd-gnrBz_H6gDvhr0NRfhczdDD6BAGGObgiKMtRwwoKvR7C_T_wRTWmBGhyjNjO83Iyof/s320/kk.png

 

 தீரன். ஆர்.எம். நௌஸாத்.
 
 00
தமிழ்நாடு ~காலச்சுவடு|  இதழ் நிறுவுனர் சுந்தர ராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில்  இவரது ~நட்டுமை| நாவல் முதற் பரிசு பெற்றது.


 00
இவரது ~வெள்ளிவிரல்| சிறுகதைத் தொகுதி  2011ல் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் ஒருங்கே பெற்றுக் கொண்டது.


 00 “
கொல்வதெழுதுதல்-90’ என்னும் நாவல் தமிழ்நாடு அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்றது.


 00
அக்கினிக் குஞ்சு இணையம் நடத்திய எஸ்.பொ. நினைவு நாவல் போட்டியில் இவரின் வக்காத்துக்குளம் நாவல் மூன்றாம் பரிசு பெற்றது.


 00 ~
தினக்குரல்| நாளிதழும் பிரான்ஸ் தமிழ்வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்| என்ற வானொலி நாடகம் 3ம் பரிசு பெற்றது.


 00 ~
நல்லதொரு துரோகம்|  என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக் கழக தமிழ்சங்கம்  இவருக்கு முதற்பரிசாக தங்கப் பதக்கம் அளித்தது..


 00
அத்துடன்ää ~சாகும்-தலம்.| என்ற சிறுகதை தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் சிறப்புப்பரிசு பெற்றது.


 00 ~
ஞானம்| சஞ்சிகை நடத்திய புலோலியூர் . சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் இவரது  ~தாய்-மொழி| சிறுகதைக்கு முதற்பரிசு கிடைத்தது.


 00
கிழக்கிலங்கையின் சாய்ந்தமருதுவில் 1960ல் பிறந்த இவர் இலங்கை அஞ்சல்துறையில் தபாலதிபராக 31 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

 

கிழக்கிலங்கையின் இலக்கிய வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு அடையாளம.; இவர்.

                                               
தம்பிலுவில் ஜெகா

 

000

 

முன்மொழிவு----தி. ஞானசேகரன்

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6Mh0zMzMkCaRaO_r-r2EuP-lYGValfQudA4AibDenihRUjk6d1zQw0SIIAw71rbljSKG6YU4GWxjpRXnrmncLmUsowvTGTLm4Zd8muIZJYjkW9gzeODz7zDe3-JqU0MEu2PqpnPBZKFTA/s1600/download.jpg

 

 

படைப்பிலக்கியத் துறையில் எழுத்தாளர் ஆர். எம். நௌஸாத் வெளியிடும் ஏழாவது நூல் இது.  ஏற்கனவே தமிழ்நாடு காலச்சுவடு இதழ் நடத்திய சுந்தரராமசாமி 75 இலக்கியப்போட்டியில்; பரிசுபெற்ற  ‘நட்டுமை நாவல்ää கொல்வதெழுதல் 90 நாவல்ää அரச சாகித்தியப் பரிசு பெற்ற வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதிää ‘வல்லமை தாராயோ சிறுகதைத் தொகுதி ஆகியவை வாசகர்களின் பார்வைக்குக் கிடைத்துள்ளன.

 

தற்போது உங்கள் கைகளில் தவழும் தீரதம் என்ற இந்தச் சிறுகதைத் தொகுதிக்கான கதைகளை அனுப்பிää “எனது இலக்கிய முயற்சிகளில் ஞானம் ஒரு பலமான பாதையை அமைத்துத் தந்ததுää ஒரு பெரிய உந்து சக்தியாக விளங்கியது. ஞானம் ஆசிரியர் என்ற முறையில் இந்தச் சிறுகதைத் தொகுதிக்கு ஒரு முன்னுரை எழுதித் தாருங்கள் என எழுதியிருந்தார் நௌஸாத்.

 

தன்னடக்கத்துடன் அவர் இவ்வாறு எழுதியிருப்பினும்ää அவரது திறமைகளே அவரை ஓர் சிறந்த எழுத்தாளனாக உயர்த்தியிருக்கிறது. ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியொன்றில் மீள் தகவு என்ற கதைக்கு மூன்றாம் பரிசினைப் பெற்றதன் மூலம்; ‘ஞானம் வாசகர்களுக்கு அறிமுகமான அவர் தொடர்ந்தும் ஞானம் சஞ்சிகை வருடாவருடம் நடத்திய போட்டிகளில் முதற்பரிசு உட்படப் பலபரிசுகளைப் பெற்றுத் தனது திறமைகளை நிரூபித்ததன் மூலம் எழுத்துலகில் தனது பலமான பாதையை வகுத்துக்கொண்டார். அவர்பெற்ற பரிசுகளும் அங்கீகாரங்களுமே அவருக்கு உந்து சக்தியாக விளங்கின.

 

நௌஸாத் என்னிடம் முன்னுரை கேட்டதுää என்மேல் அவர் கொண்டுள்ள அபிமானத்தால் என்னைக் கௌரவப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே தவிர வேறேதுமில்லை  என்பதை நான் உணர்கிறேன்.

 

இத்தொகுதியில் உள்ள ஒய்த்தா மாமாää ‘கள்ளக் கோழிää ‘~;க் (தீரதம்) ஆகிய கதைகள் ஞானத்தில் வெளியானபோது வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.தான் வாழும் சமூகத்தின் மீதான பண்பாட்டு அம்சங்களையும் விழுமியங்களையும் சமூகக் கட்டமைப்பின் பல்வேறு கூறுகளையும் அவதானித்து அவற்றை உணர்வு பூர்வமாகச் சித்திரிப்பதில் நௌஸாத் வல்லவராக இருக்கிறார்.

 

இத்தொகுதியில் உள்ள முதலாவது கதையான ஒய்த்தா மாமாவை அவர் ஆரம்பிக்கும் விதமே அலாதியானது. பாசாங்கற்றää அர்த்தம் செறிந்த பழகு சொற்களை கலையழகோடு ஒழுங்கமைத்து வாசகர் உள்ளங்களில் ஓர் ஒட்டிழுப்பை அவர் ஏற்படுத்திவிடுகிறார்:

 

எனக்குப் பத்து வயதிருக்கும்போது அது நடந்தது.. ஒய்த்தா மாமாவைக் கண்டாலே எனக்குப்பயம். அவர் சிறுவர்களின் குஞ்சாமணியை தயைதாட்சண்யமின்றி அறுத்தெறிகிறவர் என்று கேள்விப்பட்டதிலிருந்து இந்தப்பயம். இது நிச்சயமாக நமக்கும் எப்போதோ நடக்கத்தான் போகிறதென்று உணர்ந்ததிலிருந்து அவரைக்கண்டாலே குலை நடுக்கம்தான். அப்படி இவர் குஞ்சாமணியை அறுத்தெறிகிறவர் என்றால்ää நம்மட வாப்பாää பெரியப்பாää பெரிய ஆம்பிளையள் எல்லாம் எப்படி ஒண்டுக்குப் போகிறார்கள் என்ற கேள்வி மண்டையைக் குடையும்…”  இப்படியாகத் தொடங்கிää தொடர்ந்து சுன்னத்துக் கலியாணம் எப்படி நடத்தப்படுகிறது என்ற செய்திகளையெல்லாம் விலாவாரியாகக் கதையில் ஆவணப்படுதியிருக்கிறார் ஆசிரியர். அவரது நுட்பமான பார்வையும்ää சொல்நேர்த்தியும் மிகவும் சுவாரஸ்யமாக  இக்கதையை நகர்த்திச் செல்கின்றன. சமூகம் சார்ந்த யதார்த்தப் பார்வையுடன்கூடிய விபரணை ஆசிரியரின் சிறப்பான சமூக அவதானிப்பைப் புலப்படுத்துவதாய் அமைந்துள்ளது.

 

கள்ளக் கோழி என்ற சிறுகதையில்ää கல்யாணம் ஆகி மூன்றே மாதத்தில்; கணவனும் மனைவியும பிரிய நேரிடுகிறது. கோபித்துக் கொண்டுபோன கணவனையும்; மனைவியையும் சேர்த்துவைக்க ஆத்தப்பா கிழவன் முயற்சி எடுக்கிறான்.

 

 “டே ஆத்தப்பாக் கௌவா.. ஒண்ட பேத்தியைப் பண்ணின நாள்ள இரிந்து என்ட மகனுக்கு யாவாரத்தல நட்டம்டா.. நமக்கு வள்ளா குறி கேட்டுப்பார்த்துட்டம்; அவள வெலக்கினாத்தான் துசிவத்தும் வெலகுமாம். இனி இஞ்ச வராதடா கௌவா காத்திக் கோட்டுலதான் வழக்கு விளக்கம் எல்லாம்.. என மாப்பிள்ளையின் அம்மாக்காரி கூறிவிடுகிறாள்.வருடங்கள் இரண்டு ஓடிவிட்டன. வேறுவழியின்றி பேத்திக்கு கிழவன் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார். இந்த நிலையில் பேத்தி இரவில் மாட்டுத் தொழுவத்தில் இரகசியமாக ஓர் ஆடவனைச் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொள்கிறாள். இதனை  ஆத்தாக்கிழவன் அறிந்து கொள்கிறான். ஆனால் பேத்தியிடம் எதுவும் கேட்க வில்லை.  இரவில் தனது பேத்தியைக் காணவரும் அந்த ஆடவனை ஒளிந்திருந்து வெட்டிச்சாய்க்க அரிவாளுடன் வீட்டின் பின்புறத்திலுள்ள பெரப்பம் பத்தைக்குள் காத்திருக்கிறான் கிழவன்.

 

கதை முடிவை நோக்கிப் பின்வருமாறு நகர்கிறது ..அருவாள ஓங்க.. டோர்ச்சி லைற்று வெளிச்சத்துல அவண்ட சொத்தையப் பாத்த ஆத்தப்பா கௌவன் வெறைச்சிப் போய்ட்;டான். ஒடன அருவாக்கத்திய கீள போட்டுட்டான்ää வெக்கத்துல மெலச்சிப்போய் அப்பிடியே செல மாய்ரி நிண்டுட்டான் அப்பிடியே குந்திட்டான்..

அந்தக் கள்ளக்கோழி யார் என்பது கிளைமாக்ஸ்.

 

வாழ்க்கையை யதார்த்தமாகப்படம் பிடித்துக்காட்டி நம் இதயங்களில் ஆழமாகப்பதிய வைக்கிறது இக்கதை. ஆசிரியரின் சமூக அனுபவம் இக்கதையைக் கட்டமைப்பதில் பெரிதும் உதவியிருக்கிறது. வாழ்வியலின் மெய்ம்மை இக்கதையில் வலுப்படுத்தப்படுகிறது. மானிடத்தையும் மானிட நடத்தை வேறுபாடுகளையும் மானிட நேயத்தையும் இக்கதை பிரதிபலிக்கின்றது.

 

பொன்னெழுத்துப் பீங்கான் என்ற சிறுகதையில் ஆசிரியர் சொல்லவரும் செய்தி மிகவலுவானது. சவரியத்தும்மாவின் புரு~ன் ஏகபத்தினி விரதன். பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன்.  சவரியத்தும்மாவுக்கு 26 ஆவது வயதாக இருக்கும்போது வயல்காவலுக்குச் சென்ற கணவன் புலிப்படையினரால் கொல்லப்படுகிறான். கைம்பெண்ணான  அவள் மறுமணம் செய்யாது தனது பத்து வயது மகளை வளர்த்து ஆளாக்குவதில் பெருமுயற்சி எடுக்கிறாள். மகளும் படித்து திறமையாகச் சோதனைகளில் சித்தியடைந்து அரசாங்கத்தினால் மேல்படிப்புக்கு லண்டனுக்கு அனுப்பப் படுகிறாள். அவ்வாறு சென்ற மகள் சிலகாலத்தின் பின் லண்டனில் இருந்து கடிதம் அனுப்புகிறாள். அத்துடன் தனது புகைப்படம் ஒன்றையும் சேர்த்து அனுப்புகிறாள். அந்தப்புகைப்படத்தில்;  ஒரு வெள்ளைக்காரனும் அவள் அருகிலே நிற்கிறான். அதனைக்கண்டு கலக்கமுற்ற சவரியத்தும்மாதனது மகளுக்கு அறிவுரை கூறுவதாக இச்சிறுகதை கட்டமைக்கப்பட்டுள்ளது. சவரியத்தும்மாää தான் கூறுவதை ஒரு கெசட் பீஸில் பதிவு செய்து மகளுக்கு அனுப்புகிறாள்.

சவரியத்தும்மா தனது கணவனுடன் வாழ்ந்த காலத்தில்ää அவனால் அவளுக்குக் கூறப்பட்டதாக வரும் பகுதி இக்தையின் ஆணிவேர்:

டியே.. சவரியத்து.. இந்தப் பொன்னெழுத்துப் பிங்கானில் மட்டுந்தாங்கா நான் சாப்டுற.. பலபல பீங்கானுகள்ள  சாப்பிடுற பளக்கம் எனக்கு ல்லடி.. நீ யான் என்ட பொன் னெழுத்துப் பிங்கான். ண்டு சொல்லி என்னைப் பார்த்து கண்ணைச் சிமிட்டிச் சிரிச்சாரேää வெளங்கிச்சா புள்ள  ஒனக்கு அது ஏணுன்டு.. அதனுட கருத்து என்னண்டு..? பெரிய இங்கிலிசி சிங்கில மெல்லாம் படிச்சிரிக்கிறியே.. இதர அர்த்தம் தெரியுமா நொக்கு?

இதில் ஆசிரியர் சொல்லும் வாழ்க்கைக் கூறுகளை மிக உருக்கமாகவும் நேர்மையாகவும் சித்திரிக்கிறார். நமது பாரம்பரிய சமூகப் பெறுமானங்களின் சிறப்பை வெளிப்படுத்துகிறார். இச்சிறுகதையின் கதைப்பின்னலுக்கு அப்பால்; ஓர் உன்னத வாழ்க்கையைத் தரிசிக்க முடிகிறது.

 ‘குறியீட்டியம் ஒரு நேர்த்தியான கலைவடிவமாகும். அது சுவைஞனை சிந்திக்கவும் தேடல்செய்யவும் வைக்கிறது. மும்மான் என்ற சிறுகதை எமது நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பான வரலாற்றை குறியீட்டுப்பாணியில் விபரிக்கிறது.

சிங்கள மக்களைச் சிங்கங்களாகவும்ää தமிழ்ப் போராளிகளை புலிகளாகவும்ää முஸ்லிம்களை முயல்களாகவும் உருவகித்துக் கதையை நகர்த்திச் செல்லும் ஆசிரியர்ää சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் நடுவே முயல்கள் அநியாயமாக அகப்பட்டுப் பேரழிவைச் சந்தித்த வரலாற்றைச் சித்திரிக்கின்றார். எதிர்காலத்தில் இந்தப் பேரழிவுகளிலிருந்து முஸ்லிம்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளää செய்ய வேண்டியது என்ன? என்ற கேள்விக்கு விடையிறுப்பதாக அமைகிறது இச்சிறுகதையின் முடிவு. ஆசிரியர்  சமூகத்துக்குச் சொல்ல வந்த செய்தியைக் கூறுவதற்கு போரியல் வரலாற்று நிகழ்வுகளைத் துணையாகக் கொண்டிருக்கிறார். மிகவும் கண்ணியமாகவும் நேர்மையாகவும் அழகுறச் சொல்லிச் செல்லும் அவரது முயற்சி பராட்டப்படவேண்டியது.

 

அணில் என்ற சிறுகதை பேசும் அரசியல் வித்தியாசமானது. இலங்கை அரசியல் வாதிகள் இனவாதம் பேசி அரசியல் நடத்தினாலும் இந்த நாட்டின் சாதாரணப் பொதுமக்கள் மத்தியில் உறவும் ஒற்றுமையும் நேயமும் இருக்கவே செய்கின்றன என்பதை இக்கதையிலே காண்கிறோம்.

நௌஸாத் தொழில் ரீதியாக ஒரு தபாலதிபகராகக் கடமையாற்றியவர். அவர் தனது நேரடி அனுபவங்களையே  கதையாக்கியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு  ‘அணில் என்ற கதையின் கதைக்களம்ää பாத்திரவார்ப்புää கதைச்சம்பவங்கள்ää சூழல் யாவும்  தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.

 

 பெரிய தபாலதிபர் வினாயகமூர்த்தி ஒரு யாழ்ப்பாணத் தமிழர். உதவித் தபாலதிபர் நஸீர் ஒரு முஸ்லிம். தபாற்சேவகன் இந்திக ஒரு சிங்களவர்.

பெரிய தபால் அதிபர் வினாயகமூர்த்தி யாழ்ப்பாணப் பேச்சு மொழியில் கறாராக அரசியல் பேசுவார்: அடே நஸீர்இந்திக்க கேளுங்கடா.. ஓமந்த கேம்ப எக்க அபே கொட்டி அற்றாக் கறன்ட வெலாவட்ட..(ஓமந்தைக் காம்பை எங்கள் புலிகள் தாக்கும்போது) என்று புலிப்படைப் புகழ் பாடத்தொடங்கி ஸ்ரீ போராட்டம் தொடக்கம் தரப்படுத்தல் சட்டம்.. சிங்களம் மட்டும் சட்டம் அதன் விளைவாக தமிழர் பாதிப்புகள்.. அதன் தொடர்ச்சியான போராட்டங்கள்ää அது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்த வரலாறு என்றெல்லாம் தொடரவே நஸீரும் இந்திகவும் அணிலும் புன்னகைத்தபடி வேறுவழியின்றி வேண்டா வெறுப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

 

இப்படியாகப் பேசுகின்ற தபாலதிபர்ää ஒருநாள் இந்திகாவை சாராயம் வாங்கக் கடைக்கு அனுப்பிவிட்டு அவன் அன்பாக வளர்க்கும் அணிலை வெட்டிக் கறியாக்கி விடுகிறார்.இதனை அறிந்த நஸீர் அதிர்ந்து போய்விட்டான்.

இப்ப இந்திக வந்தான் எண்டால் என்ன நடக்கும்..? இங்க நடக்கப் போற கொலைக்கு நான் சாட்சியா இருக்க விரும்பேல்லை. திறப்பைப் புடிங்க ஐயா.. நான் வீட்டைபோறன்.. என்ன மடத்தனம் இது.. அவன்ட அணிலைப் புடிச்சிபாவம் புண்ணியம் பாக்காம கொண்டு சே ஐயா கடைசியாச் சொல்லுறன் நீங்க இஞ்ச இருக்கிறது நல்லாயிருக்காது. டக்கெண்டு வெளிக்கிட்டு எங்கயாச்சும் போங்கஇல்ல என்னோட வாங்க.. அவன் இந்திகவிட அண்ணன்மார் ஆமில இருக்கான்.. அனுராதபுரத்தில் அறுத்து ஒரு மாதமாகல்ல சே.. என்ன செய்யப் போறீங்க ஐயா..?

வீட்டுக்குச் சென்ற நஸீரால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. பெரியவர் கொலைசெய்யப் பட்டுவிடுவாரா என மனம் பதைபதைத்துக் கொண்டிருந்தது. இரவு தொலைபேசியில் பெரியவருடன் தொடர்புகொள்ள முயல்கிறான். எதிர் முனையில வெகுநேரமாகியும் பதிலில்லை.

கவித்துவமான உரைநடை கதையின் இலக்கியப் பெறுமானத்தை வலுவுடையதாக ஆக்கிவிடுகிறது.

 

கதைகளைக் கட்டமைப்பதில் ஆசிரியர் தேர்ந்தெடுக்கும் உத்திமுறைகள் பற்றியும் விசே~மாகக் குறிப்பிடவேண்டும். ஒயத்தா மாமா சிறுகதை ஒரு சிறுவனின தற்கூற்றாக அமைந்துள்ளது.  ‘பொன்னெழுத்துப் பீங்கான்  சிறுகதை ஒரு தாய் மகளுக்கு சி.டி.யில் தன் பேச்சைப்பதிவு செய்து தபாலில் அனுப்புவதாக அமந்துள்ளது. மும்மான் குறியீடாகச் சொல்லப்படுகிறது. சில கதைகள் ஆசிரியர் கூற்றும் பாத்திரங்களின் உரையாடல்களுமாக வளர்க்கப்படுகின்றன.

 

காக்கா மார்களும் தேரர்களும் என்ற கதையில் ஆசிரியர் ஒரு புதிய உத்தியைக் கையாள்கிறார். இக்கதை பத்திரிகைச் செய்திகள் பலவற்றின் தொகுப்பாக அமைந்துள்ளது.  நமது நாட்டில் பிக்குகள் சிலர் தினம் தினம் முஸ்லிம்களுக்கு எதிராகப் பரப்பும் இனரீதியான செய்திகளும்ää முஸ்லிம் தலைவர்கள் சிலரின் நழுவல் போக்குகழும். ஆலிம் சபையினரின் இயலாமையும்ää முஸ்லிம் அமைச்சர்கள்; சிலரின் அறிக்கைகளும் செய்திக் கீலங்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் இனரீதியான துன்புறுத்தல்களையும்  அவற்றிற்கு ஏதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியாத கையறுநிலையையும் படம் பிடித்துக்காட்;;டும் ஆசிரியர்ää இக்கதைமூலம் ஒரு சமூக விளிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

 

இத்தொகுப்பில் உள்ள தீரதம்ää கபடப்பறவைகள்ää ஆத்துமீன்ஆசை ஆகிய கதைகளும் இலக்கியப் பெறுமானம் கொண்ட கதைகளே.

 

நௌஸாத்தின் சிறுகதைகளின் உயிரோட்டமான அம்சம் அவரது உரைநடை. அனுபவத்தைத் தொற்றவைப்பதற்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்த உணர்ச்சிக் கூறுகள் நிறைந்த - அதேவேளை சமூக யதார்த்தத்திலிருந்து விட்டகலாத நடைச்சிறப்பு அவருடையது.

 

நௌஸாத் கதைசொல்லும் முறையில் ஒரு புதுமை இருக்கிறது. புதுப்புனல் ஊற்றின் குளிர்மைப் பிரவாகம் கொள்கிறது. அவருடைய சிறுகதைகளைப் படித்து முடித்ததும் அவைதரும் உணர்வுகள் படிப்பவர் மனதில் தொற்றி நிற்கின்றன.

 

மேலும் பல வெற்றிகள் எதிர்காலத்திலும் அவருக்குக் காத்திருக்கின்றன என்பதை இச்சிறுகதைத் தொகுதி கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளது. நௌஸாத்துக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

 

தி. ஞானசேகரன்

 

ஞானம் சஞ்சிகை பிரதம ஆசிரியர்

3-பிää 46ஆவது ஒழுங்கை

கொழும்பு -06

29-06-2016

 

 

000

 

வழிமொழிவு

 

பேராசிரியர். றமீஸ் அப்துல்லாஹ்.

 

 

 

சமூகங்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவதில் இலக்கியங்களுக்கு முக்கிய பங்குண்டு. ஈழத்தில் தமிழ் பேசும் இரு சமூகமானதமிழர்களும் முஸ்லிம்களும் தமதுஅடையாளத்தைவெளிப்படுத்துவதற்கு இலக்கியத்தைமுக்கியசாதனமாகப் பயன்படுத்திஉள்ளனர். மரணத்துள் வாழ்வோம் என்றகவிதைத் தொகுதி ஈழத்துத் தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்தமானபோராட்டவலியைவெளிப்படுத்துவதாகஅமைந்தது. இதேபோன்றுமீசான் கட்டைகளில் மீளஎழும் பாடல்கள் என்றதொகுதி போராட்டத்தின் உக்கிரத்திற்குள் நசுங்குண்ட முஸ்லிம்களின் வலியைவெளிப்படுத்தியது. அதேநேரம்தொகுதிகளாகவெளிவராவிடினும் 1980களுக்குப் பின்னர் ஈழத்தில் வெளிவந்தபெரும்பாலானசிறுகதைகள் அவ்வச் சமூகஅடையாளத்தைவெளிப்படுத்துவதில் பெரும் பங்குவகித்தன.

 

1950களில் ..கிழக்கிலிருந்து சிறுகதைஎழுத முனைந்தபொழுது வேறொருவிதமான நெருக்கடியைச் சந்தித்தார். தமிழகசஞ்சிகைகளுக்குஅவர் எழுதியசிறுகதைகளில் இருந்த இங்குள்ளஊர்ப்பெயர்களும் ஆட்பெயர்களும் திருத்தப்பட்டுத் தமிழகப் பாணியிலே வெளிவந்தது. ஈழத்துச் சுதேசஉணர்வுகளுடன் எழுதப்பட்ட அவரது கதைகள் செங்கல்பட்டுவாகவும் ஆபீசாகவும் தலைமைக்குமாஸ்தாவாகவும் திருநெல்வேலிச் சந்தியாகவும் மாற்றப்பட்டவரலாறுஉண்டு. அதுபோக ஷரிஆ சம்பந்தப்பட்டபிரச்சினைகளைக் கதைக் கருவாகக் கொண்டுஅவர் சிலகதைகளைஎழுதியவரலாறும் உண்டு. இந்தத் தொடர்ச்சிபோக 1980களில்தான் தமதுசொந்தசமூகஅடையாளங்களை இயல்பாகவும் வேண்டுமென்றும் தமதுகதைகளுக்குள் கொண்டுவரநமதுஎழுத்தாளர்கள் முனைந்தனர்.

 

இந்தவரிசையில் சாய்ந்தமருதைச் சேர்ந்த தீரன் ஆர்.எம். நௌஸாத் வல்லமைதாராயோää‘வெள்ளிவிரல்  என்ற இரு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டவர். இவரது பிந்திய சிறுகதைத்தொகுதியில் இனப்பிரச்சினை தொடர்பான பல்வேறுகதைகள் வெளிவந்தபோதும் முஸ்லிம் சமூகம் சார்ந்த சிலகதைகளும் வெளிவந்தன. அதேபோன்று இத் தீரதம் என்ற தொகுதியில் வெளிவந்தகதைகளும் இனப்பிரச்சினை சார்ந்ததும் சமூக அடையாளங்களை வெளிப்படுத்தும் கதைகளாகவும்அமைந்துள்ளன.

 

அதேநேரம் நட்டுமைää’ ‘கொல்வதெழுதுதல் 90’ ஆகிய இரண்டு நாவல்களையும் தீரன் எழுதியுள்ளார். கிழக்கில் நாவல் துறையின் வளர்ச்சி  மிகவுமே போதுமானதல்ல. அவ்வாறு இருப்பினும் இவ்விரு நாவல்களையும் முக்கியமான நாவல்களாகக் கொள்கிறபோதும் இதனுள் உள்விழுந்து பார்க்கிறபோது விமர்சனரீதியாகச் சிலகேள்விகளை எழுப்பவேண்டிய தேவையிருக்கிறது. அதேபோன்று தீரதம் என்ற இத்தொகுதியில் வெளிவந்தசிறுகதைகள் சிலவற்றைப் பற்றியும் சிலகேள்விகள் எழுப்பவேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாகக் கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் அனுபவங்கள் இந்தக் கதைகளில் பதிவாகியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.

 

ஒய்த்தாமாமாää‘பொன்னெழுத்துப் பீங்கான்ää தீரதம்.  முதலானகதைகள் முஸ்லிம் சமூகம் சார்ந்த மிகமுக்கியமான கதைகள். இப்போதைய சிறுவர்களுக்கு ஒய்த்தாமாமா பற்றிய அனுபவம் இருப்பதில்லை. ஒய்த்தாமாமாவின் வேலைகள் எல்லாவற்றையும் வைத்தியர்கள் பாரமெடுத்துக்கொண்டார்கள். முஸ்லிம்களிடம் சாதிஉண்டா என்று கேட்பவர்களுக்கு ஒய்த்தாமாமா  ஓர் ஆதாரமாக அமையக்கூடும். ஆனால்ääஅந்தச் சமூகக் கட்டுமானத்தைப் பற்றி தீரன் சொல்லவரவில்லை என்று நினைக்கிறேன். அதேநேரம ;ஒய்த்தாமாமாவைப் பற்றிய ஒரு பதிவினை தீரன் மிகஅற்புதமாகக் கொண்டுவந்திருக்கிறார்.

 

பொன்னெழுத்துப் பீங்கான் லண்டனுக்குச் சென்ற தன் மகளின் செய்தியை அறியவிரும்பும் தாயின் ஏக்கத்தைவெளிப்படுத்துகின்ற ஒரு  நல்லகதை. அவள் பக்கத்தில் ஒரு  வெள்ளைக்காரனோடு நின்று எடுக்கப்பட்டஒரு புகைப்படப் படத்தைக் கண்டவுடன் அந்தத் தாய்க்கு ஏற்பட்ட மனஉணர்வு மிகஅற்புதமாக இந்தக் கதையில் வருகிறது. புலிகளினால் கொலைசெய்யப்பட்டதன் கணவர் ஒரே பீங்கானிலேபொன்னெழுத்துப் பீங்கானிலே சாப்பிட்ட கதையை அந்தத் தாய் இக்கதையில் விபரிக்கிறாள்.

 

அப்படிப்பட்டஎனக்கிப் பொறந்தஒனக்கிட்டயும் அந்தப் பொன்னெழுத்துப் பீங்கான்தான் இரிக்கிம்..அதுலநீஆரையும் சாப்பிடஉடமாட்டாய் ண்டும் எனக்கித் தெரியிம்..ண்டாலும் புள்ளே..எண்டமனம் கெடந்துஅல்லாடுது.. ஒடன இந்த கெசட்டுப் பீசக் கேட்டஒடனே நாட்டுக்குப் பறந்துவாடா என்டகண்டுமகளாரே! நீ வெராட்டி என்ட மய்யத்துலதான் முளிப்பாய்.. செல்லிட்டன்.. வல்லபெரியநாயன் ஒனக்கு ஒதவி செய்யட்டும்.. ஆமின் ம்க்க்க்க்..ம்ம்ம்.

 

கிராமிய உணர்வு ததும்பும் இக்கதையில் பொன்னெழுத்துப் பீங்கான் இங்கு ஒரு குறியீடாக வருவதாகவே நான் உணர்கிறேன். இக்கதையிலும் முஸ்லிம் உணர்வு சார்ந்த வியாக்கியானம் ஆங்காங்கே வருகிறது.

 

தீரதம் என்பது இறைகாதலை வெளிப்படுத்துகிற மிகமுக்கியமான ஒருகதை. சூபி இசம் சார்ந்த இக்கதை பழைய மெய்ஞ்ஞான பாடல்களின் இன்னுமொரு வியாக்கியானமாக உரைநடையில் வந்த ஒன்றாகவேநான் நோக்குகிறேன். புதுமைப்பித்தன் முதலான பலசிறுகதை ஆசிரியர்களும் இந்தத் தத்துவார்த்தரீதியான ஆன்மீகம் சார்ந்த கதைகளை எழுதியிருக்கிறார்கள். அவ்வகையில் முஸ்லிம்கள் சார்ந்த ஆன்மீகரீதியான உணர்வினை வெளிப்படுத்துகிற மிகஎளிய ஒருகதையாகவே  தீரதம் கதையைக் கொள்ளலாம்.

 

கிராமிய அனுபவங்களைக் கூறுகிற அதுவும் கிழக்குப் பிரதேச கிராம அனுபவங்களைக்  கூறுகிற ஒரு நல்லகதை மறிக்கிடா. ஆனால்ää இக்கதையைப் பொறுத்தவரையில் மாற்று இனப் பாத்திரங்கள் கதையாகி இருப்பது நமது இன உறவுக்கு அப்பாலே முரண்படத்தக்க கேள்விகளையும் எழுப்பக்கூடும். இப்படியான கதை சொல்லுகிறபாங்கு ஈழத்துச் சிறுகதை மரபிலே உண்டு. மிகக் கவனமாக இந்தமாற்று இனப் பாத்திரங்களைக் கையாள்வதில் ஆசிரியர்கள் மிகப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தேவையிருப்பதாகவும் நான் உணர்கிறேன்.

 

அணில் இன ரீதியான விவகாரங்களை வெளிப்படுத்துகிற ஒருமுக்கியமான நல்லகதை. இதேபோன்று புதியஉத்தியில் அமைந்த இன விவகாரங்களைக் கையாள்கிற மற்றுமொருகதை  ‘காக்காமாரும் தேரர்களும் இக்கதை வெறும் செய்திகளைத் தொகுத்துச் சொல்வதாக இருந்தாலும் ää

 

இதெல்லாம் ஒருசிறுகதையா?’ என்று முகத்தில் வீசினார் பத்திரிகைஆசிரியர். இதெல்லாம் சிறுகதையல்ல.. பெரும்பெரும் கதைகள்.. என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன்.

 

இக்கதையிலுள்ளபெரும்பெரும் கதைகள் என்றசொல்லின் மூலமே இச்சிறுகதையின் முழு அர்த்தத்தையும் ஆசிரியர் வெளிக்கொண்டுவருகிறார். இவ்வகையான கதைகளை தீரன் முன்னரும் எழுதியுள்ளார். மும்மான் என்றகதையும் இன ரீதியான விவகாரங்களை வெளிப்படுத்துகிற நல்லகதை.

 

இலக்கியக்காரர் ஒவ்வொருவருக்கும் அவரவர் வீட்டிலே இருக்கிற பிரச்சினைகளை ஒரு அற்புதமான உத்தியோடு அணுகியிருக்கிற கபடப்பறவைகள் என்ற கதை சுவாரசியமானதுதான்.

 

மேலும்சில கதைகளோடு அமைந்த இந்த தீரதம். என்ற தொகுதி ஒருநல்ல சிறுகதை ஆசிரியன் ஆர்.எம். நௌஸாத் என்பதற்கு மிகப் பெரும் சான்றாகும். நல்ல படைப்புக்களை வாசிக்கின்றபோது இன்னும் இன்னும் செழுமைபெற்ற நல்லகதைகள் வந்துசேரும். அதுமாத்திரமன்றி இந்தக் கதைகளைச் செப்பனிடச் செப்பனிட இன்னும் நல்லகதைகள் வந்துசேரும். நௌஸாத்தின் கதைகள் புதியஅனுபவங்களைத் தருகிற நல்லகதைகள் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. தீரதம் ஆசிரியருக்கு நமது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் என்றும் உண்டு.

 

 

கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ்

 

தலைவர்.. மொழித்துறைää

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.

ஒலுவில்- சிறிலங்கா.

2016.11.10