Mursith Mohamed நிகழ்வுக்கு வந்தும் கடைசிவரை இருக்க முடியாமல் போய்விட்டது.. அலுவலக வேலை நிமித்தமாக ஏற்கனவே பயணப்படவேண்டி இருந்ததால்....
நன்றிகலந்த வாழ்த்துப்பூத்தூவல்கள்..
தீரன். ஆர்.எம் நௌஷாத் இலக்கியனின் நைஸான நழுவுதலும் ஒரு ரசிக்கத்தக்க இலக்கியம்தான்...ஆறுதலாகப் பேசுவோம்
Shibly Ahamed சில தனிப்பட்ட மருத்துவக் காரணங்களால் வரமுடியவில்லை. வீடு வந்து நூலொன்றைப் பெறுகிறேன் இன்ஷா அல்லாஹ்
தீரன். ஆர்.எம் நௌஷாத் ----- சபாத் அஹ்மத் ,,,,,தேவைப்பட்ட புகைப்படங்களை தந்தீர்கள் சாச்சா......மிக்க நன்றிகள்.....சின்ன நூலுக்கு ஒரு பெரும் தொகை தந்தீர்கள்...என் சகோதரி வியந்து போய் மிகுதியை அங்கிளிடம் கொடுத்து விடு என்றாள்...என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் நான்.......
Rahmath Rajakumaran தீரன் இன்னமும் தர வேண்டும் இலக்கியத்தின் வாயில் திறந்தே இருக்கிறது
Waffa Farook உடல் வர மறுத்தாலும் மனம் பறந்து வந்து முன்வரிசையில் அமர்ந்து பிராத்தித்துகொண்டிருந்ததை நீ கண்டிப்பாய் நன்பனே!
Nawfeer Atham Lebbe சிறந்த நிகழ்வு. வாழ்த்துக்கள்
தீரன். ஆர்.எம் நௌஷாத் உங்களுடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருக்கக் கிடைக்கவில்லை... மீண்டும் சந்திக்க உரையாட மனம் ஏங்குகிறது நௌபீர்
Mumthas Hafeel தூரம் என்னைத் தடுத்தாலும்
மனக்காகமோ
முன்வரிசையில் அமர்ந்திருந்தது
பெருத்த பிரார்த்தைகளுடன்.
மன்னிக்க வேண்டுகிறேன் நண்பா.
தீரன். ஆர்.எம் நௌஷாத் அது நீங்கதானா...? அன்பான மனங்களுக்கு தூரம் ஒரு கேடா...? உங்கள் வாழ்த்தும் நீங்க வடிவமைத்த பிரதிமைகளும் என்னை உங்கள் பால் வெகுவாக ஈர்க்கச் செய்து விட்டது ஹபீல் -மிக்க நன்றிகள்
Mumthas Hafeel தீரத்தையும் மறிக்கடாவையும் கூடவே கட்டி VPP இல் அனுப்பி வையுங்கள்.காசு கட்டி வாங்கிக்கொள்கிறேன்.
Ramees Deen அல்ஹம்துலில்லாஹ்!
தீரன். ஆர்.எம் நௌஷாத் தங்கள் தந்தையார் என் அன்புக்குரிய ஆசுகவி அன்புடீன் அவர்கள் தன உடல் சுகயீனத்தையும் பொருட்படுத்தாது வந்திருந்து வாழ்த்திச் சென்றார்...உண்மையில் அன்பின் தீன் முழக்கம் அவர்தான்...
Ramees Deen "எல்லோரும் வாழ்வோம் இனிது"-இது எனதருமை தந்தையின் பிரார்த்தனை.
உங்களுக்கு நன்றி சேர்.
Mansoor A Cader மறிககடா மட்டும் வாசிக்கக்கிடைத்தது. அழகான காட்சிப்படுத்துகை. நுட்பமான கட்டமைப்பு. இயற்கையான படிமங்கள். ஒரு மலையாளப்படம் பார்த்த பிரமிப்பு. (பிறகு என்ன நடந்தது தீரன்)
Abdul Rasak Abdul Rasak நானும் வாசித்துவிட்டு நீண்டநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.
தீரன். ஆர்.எம் நௌஷாத் Mansoor A Cader sir... அதை ஏன் சேர் முதலில் வாசித்தீர்கள்...? ம்க்கும்..... அதன் பின் என்ன நடந்ததென்றால்...உண்மையில் மையதீன் காக்கா அந்த ஊரை விட்டும் திரும்பி வரவில்லை... அவனைத் தேடித் போன நண்பனும் வரவில்லை... அது இணக்கலவர் தீயாய் பற்றி எரிந்து இரு ஊர்...See More
K S Mohammed Shuaib இந்த காரியப்பர் என்றால் என்ன...?
தீரன். ஆர்.எம் நௌஷாத் காரியப்பர் என்றால் .....இது இலங்கை முஸ்லிம் சமுகத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு மட்டும் வழங்கப்படும் குடும்ப்பப் பெயர்.....கி.பி.1600களில் ஏமன் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த ஒரு வைத்தியர் சிங்கள அரசனிடம் அரண்மனை வைத்தியராக கடமையில் அமர்ந்தார். அவரது வைத்தியத் திறமை கண்டு அந்த அரசன் அவருக்கு அளித்த பட்டப் பெயர் அது....சிங்கள மொழியில் ..கார்ய என்றால் அதிகாரி..பேரு என்றால் குறுநிலப் பகுதி... வைத்தியருக்கு சில கிராமங்களை வழங்கி கௌரவித்து வழங்கிய ஒரு பட்டம் கார்ய பேரு. அது நாடைவில் திரிந்து காரியப்பர் என வழங்கலாயிற்று...அந்தக் குடும்பத்தினர் இன்று வரை விடாப்பிடியாக தம் பெயருக்கு பின்னால் அந்த பட்டப் பெயரை ஒரு கட்டாய பெருமையுடன் உபயோகித்து வருகின்றனர்,,, அமைச்சர் எம்.எஸ்.காரியப்பர்-அமைச்சர் அஷ்ரப் போன்றோர் இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்....
K S Mohammed Shuaib ஓஹோ...அப்படியா....?
K S Mohammed Shuaib எனக்கு இந்திய ராணுவத்தின் பழைய தளபதி பேரு ஞாபகம வந்திட்டு...ஜெனரல் கரியப்பா..!!
தீரன். ஆர்.எம் நௌஷாத் K S Mohammed Shuaib நீங்கள் குறிப்பிட்ட ஜெனரல் கரியப்பா..யாரென்று நினைக்கிறீர்கள்...? கார்யப்பர் குடும்பத்திலிருந்து காணாமற் போன அதாவது கோபித்துக் கொண்டு வீடு விட்டு ஓடி காணாமல் போன அப்துல் ரஹீம் காரியப்பரின் மகன் ஆவார்....இந்துவாக மாறி வடநாட்டில் வாழ்வதாக நேரில் கண்ட இன்னொரு லாபீர் காரியப்பர் தன் நாட குறிப்பில் எழுதி உள்ளார்.
Isaac Henry Victor Since I have had plain-tea with MS several times while he sat on his easy chair ... this information and conversation is very valuable ... I am glad your book release went well. My best wishes to you and your family.
Mahdy Hassan Ibrahim நிகழ்வு மிகமிகச் சிறப்பாக நடந்ததில் மகிழ்ச்சி! இன்ஷா அல்லாஹ்! கொழும்பில் புத்தக நிலையங்களில் உங்கள் நூலைக் கிடைக்கச் செய்தால் வாங்கலாம்!
Abdul Gaffoor வெளியூர் நண்பர்கள் வீட்டுக்குவந்தன் காரணமாக வரமுடியவில்லை Sorry
Jamaldeen Wahabdeen நல்ல விழா தீரனும் தீரதமும் வாழ்க
No comments:
Post a Comment