Saturday, January 11, 2025

மிஸ்ரா ஜப்பார்

 

பாரதம் பாடித் தாள் தேடிக் காணாயின் தீரதமேறியுந்தன் திவ்வியச் சமூகம் வருவேன்.

அனுபவம் என்பது தானாக நேர்வது.உடன் நிகழ்வது . அவரவர் அனுபவத்தின் மூலம் ஓர் உண்மையை அடைவதே பாதை. பாதை எங்கும் அனுபவத்திரட்சி. தீரதம் தான் வாழும் சமூகத்தின் மீதான பண்பாட்டு அம்சங்களையும் விழுமியங்களையும் சமூகக் கட்டமைப்பின் பல்வேறு கூறுகளையும் அவதானித்து அவற்றின் திரட்சியாய் சிறக்கிறது.

அனுபவமே ஆனந்தம். எண்ணங்களற்ற மனவெளியில் எழுவதே அனுபவம். அதுவே எல்லை இல்லாதோர் ஆனந்தப் பெருவெள்ளம். 10 கதைகளைக் கொண்ட இத்தொகுப்பு பாசாங்கற்ற, அர்த்தம் செறிந்த, பழகு சொற்களை கலையழகோடு ஒழுங்கமைத்து வாசகர் உள்ளங்களில் ஓர் ஒட்டிழுப்பை ஆர் .எம் நெளஸாத் ஏற்படுத்தியிருக்கிறார்.
நுட்பமான பார்வையும் சொல் நேர்த்தியும் சுவாரஸ்யமான வார்த்தைகளும் சமூகம் சார்ந்த யதார்த்த பார்வையும் வாழ்வியலின் மெய்மையும் வலுப்பெற்று இருக்கிறது. இக்கதை பின்னலுக்கு அப்பால் ஒரு உன்னத வாழ்க்கையை தரிசிக்க முடிகிறது.

கோஷங்கள் வெறும் வெற்று ஒலிகள்
மௌனத்தில் பிறப்பது தான் ஞானம்