Friday, October 19, 2018

காத்தான்குடி பஹ்மியா ஷெரீப்


Fahmiya Shareef is with R.M. Nowsaath.

"தீரரின் தீரதம்"


கிழக்கிலங்கைக்கென்று ஒரு தனியான இலக்கியச்சுவை இருக்கிறது.அது மண்வாசனையா? மொழி நளினமா? பாத்திரங்களின் உயிர்ப்புத்தன்மையா? எழுத்தாளர்களின் தனித்தன்மையா? ஏதோ ஒன்று நம்மை கட்டியிழுத்து அந்த எழுத்துக்களின் காலடியில் போட்டு விடுகிறது.
தீரரின் "தீரதம்" படிக்கும் போதும் ஏதோ பக்கத்து வீட்டுக்காரியுடன் நம் உள் வீட்டு யன்னலுக்குள் நின்று பேசுவது போல் அத்தனை இயல்பாய் இருக்கிறது.அதீத கற்பனைக்கெல்லாம் இடமில்லாது கதைகள் நம்மைச்சுற்றியே ஆட்டுக்குட்டியாட்டம் மேய்கிறது.
நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாது, சிலேடைகளுக்கும் சிக்கனமில்லாது,
மனிதகுலத்தின் யதார்த்தங்களையும், சமூகப்பரப்பின் ஆழங்களையும் பலவீனங்களையும் மிக அழகாகப்பேசுகிறது தீரதத்தின் பத்து சிறு(பெருங்)கதைகளும்.
கபடப்பறவைகளும்,அணிலும், ஆத்துமீனும் படிக்கையில் கண்களின் ஓரம் கரிப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை...தீரரே உமது பாசமான இலக்கிய நட்பு கிடைத்தமைக்காய் பெருமிதம் கொள்கிறேன்....
-தொடரும்-

Comments
Nafees Mohamed R.M. Nowsaath ♥️♥️♥️♥️
Manage
Reply1d
R.M. Nowsaath ஆஹா..ஒரு நயாகரா நன்றிகளும் எவரெஸ்ட் அன்பும் பஹ்மியா ஷெரீப்
Manage
Reply15h
aana Mackeen இந்த 'தீ - ரதம்' காலமெல்லாம் பேசப்படவேண்டிய ஒன்று. பயணித்துப் பார்க்க வேண்டிய ஒன்று...
Vadakovay Varatha Rajan நீங்கள் சொன்னது மிகையான வார்த்தைகள் அல்ல . ஆத்துமீன் ஆசை , பொன்னெழுத்து பீங்கான் என்பன அற்புதமான கதைகள்
Manage
Reply13hEdited
மருதூர் ஜமால்தீன் நானும் பல முறை படித்தேன் எனது சிறுபராயத்து எண்ணம்வரும்போது அதற்குாிய கதைகளைப்பாா்த்து எனது சிறுவயதுக்கிராமத்திற்கு சென்று வந்து ஆறுதலடைவேன் 
தீரனே இதே அமைப்பில் இன்னுமொரு தொகுதி வேண்டும் கிடைக்குமா
Manage
Reply13h
Mohamed Sabry தீரரின் நட்டுமை, கொல்வதெழுதுதல், வெள்ளிவிரல் எல்லாம் வாசியுங்கள்.. அவர் எப்பேர்ப்பட்ட ஆளுமை மிக்க எழுத்தாளர் என்பது புரியும். வாழ்த்துக்கள்தீரர்
Manage
Reply13h
Fahmiya Shareef Mohamed Sabryவாசித்துக்கொண்டிருக்கிறேன் சகோ..😊
Manage
Mohamed Musny Can I borrow ☺️
Manage
Reply11h

No comments:

Post a Comment