Saturday, April 22, 2017

நூலாசிரியர் அறிமுகம் -தம்பிலுவில் ஜெகா

நூலாசிரியர் அறிமுகம்

 -தம்பிலுவில் ஜெகா 



 தீரன். ஆர்.எம். நௌஸாத்.

00 தமிழ்நாடு ~காலச்சுவடு|  இதழ் நிறுவுனர் சுந்தர ராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில்  இவரது ~நட்டுமை| நாவல் முதற் பரிசு பெற்றது.

00 இவரது ~வெள்ளிவிரல்| சிறுகதைத் தொகுதி  2011ல் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் ஒருங்கே பெற்றுக் கொண்டது.

00 “கொல்வதெழுதுதல்-90’ என்னும் நாவல் தமிழ்நாடு அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்றது.

00 அக்கினிக் குஞ்சு இணையம் நடத்திய எஸ்.பொ. நினைவு நாவல் போட்டியில் இவரின் ‘வக்காத்துக்குளம்” நாவல் மூன்றாம் பரிசு பெற்றது.

00 ~தினக்குரல்| நாளிதழும் பிரான்ஸ் தமிழ்வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்| என்ற வானொலி நாடகம் 3ம் பரிசு பெற்றது.

00 ~நல்லதொரு துரோகம்|  என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக் கழக தமிழ்சங்கம்  இவருக்கு முதற்பரிசாக தங்கப் பதக்கம் அளித்தது..

00 அத்துடன்ää ~சாகும்-தலம்.| என்ற சிறுகதை தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் சிறப்புப்பரிசு பெற்றது.

00 ~ஞானம்| சஞ்சிகை நடத்திய புலோலியூர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் இவரது  ~தாய்-மொழி| சிறுகதைக்கு முதற்பரிசு கிடைத்தது.

00 கிழக்கிலங்கையின் சாய்ந்தமருதுவில் 1960ல் பிறந்த இவர் இலங்கை அஞ்சல்துறையில் தபாலதிபராக 31 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

கிழக்கிலங்கையின் இலக்கிய வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு அடையாளம.; இவர்.

                                                தம்பிலுவில் ஜெகா

No comments:

Post a Comment