ஆத்துமீன் ஆசை.
கடந்த ஒருவாரகாலமாகச் சரியாகச் சாப்பிடாமல்ää மசக்கையாயிருந்த மனைவி மரியம்பீவி இன்று திடீரென ஆத்துமீன் சாப்பிட ஆசைப்பட்டாள். வாய்வி;ட்டுக் கேட்டும’ விட்டாள். ஆனால் றாபிக் மாஸ்டர் கடைசிச் சீட்டுக் காசையும் கொடுத்து விட்டுää மீதியாயிருந்த சில்லறைப் பணத்துடன் நிம்மதியாகவிருந்தார். அப்போதுதான் மரியமுக்கு இந்த ஆத்துமீன் ஆசை வந்துவிட்டது. கைப்பையை இவரிடம் நீட்டிவிட்டுää கெஞ்சுதலாக ஒரு பார்வை பார்த்தாள். அடுத்தகணம் இவரிடம் கைவசமிருந்த நூறு ரூபாய்ää எங்கோ புத்தக இடுக்கில் ஐம்பது ரூபாய். .. வேறென்ன செய்ய..? அவரது விதி அவரை உந்தித் தள்ளியது. கோடீஸ்வரர் சந்தைக்கு வந்து விட்டார். சேர்ட் பைக்குள் வெறும் நூற்றிஐம்பது ரூபாய் வெட்கத்துடன் ஒழிந்திருந்தது.
“கோடீஸ்வரர் சந்தை” என்றும்ää ‘டொலர் மர்ர்க்கட்’ என்றும்ää விகடமாகக் குறிப்பிடப்படும் எங்கள் பள்ளியடி மாலைச்சந்தை முக்கியத்துவமிக்க பிரதான வீதியில் அமைந்திருந்ததால்ää அதன் ‘சந்தைப் பெறுமதிகள்’ அதிகம். பிரதான வீதிப் போக்குவரத்துப் பிரயாணிகளையே பெரும்பாலும்ää வாடிக்கையாளராகக் கொண்டதால் அவசர கொள்முதல் அதிகம். பேரம் குறைவு. சொன்ன விலைதான் பெரும்பாலும். சிறிது தாமதித்தால் அடுத்த பிரயாணியிடம் கறியை இழந்துவிடுவீர்கள்.
கொழும்பு மனிங் மார்க்கட்டில் அறக்குளா மீன் கிலோ ஐநூறு ரூபாய் என்றால்ää இங்கு எழுநூற்றி ஐம்பது ரூபாய் விற்கும். முட்டை ஒன்று ஆறு ரூபாய் என்றால்ää இங்குää பத்து ரூபாய். இப்படிச் சகல மீன்கள்ää மரக்கறிää வகைகள் யாவுமே கண்டிப்பாக உச்ச விலையில் விற்பதும்ää வாங்குவதுமே இங்கு வாடிக்கை. சாதாரண கீரிமீனின் விலையே கிலோ முன்னாறுக்குப் போகும் என்றால்ää அபுர்வமாகவே அகப்படும் ஆற்றுப்படுக்கையில் பிடிக்கும் மீன்களின் பெறுமதி சொல்லுந்தரமன்று..
றாபீக் மாஸ்டரைப் போல ஒரு சாமான்ய குடும்பத் தலைவருக்கு இங்கு என்ன வேலையிருக்க முடியும்..? றாபிக் மாஸ்டர் சாதாரணமாக இங்கு வருவதில்லை. இன்றுää மனைவியின் அன்புநிர்ப்பந்தம் காரணமாக வந்திருந்தார்.
அச்சத்துடன் சந்தையை தூரத்தில் சைக்கிளில் நின்றவாறே உற்றுப் பார்த்தார். ஆத்து மீன் கொட்டப்பட்டிருக்கும் அங்காடிப் பக்கமாக சற்றே கடைக்கண்ணெறிந்து நோட்டமிட்டுக் கொண்டார். முன்யோசனையின்றி நேரடியாகச் சென்று ஆத்துமீன் விலை கேட்டால்ää மேனி நடுங்கும். மீனவத் தமிழில் பிலால் நாறும்.
றாபீக் மாஸ்டர் ஆத்துமீன் கும்பத்தை நோக்கி வெகு முன்ஜாக்கிதையாக முன்னேறினார். ஆற்று மீன்களான சுங்கான்ää பனையான்ää குறட்டைää விரால்ää கெளுத்தி வகையறாக்கள் வகை பிரிக்கப்பட்டு பரப்பியிருந்தன. துடித்துத் துள்ளிக் கலந்தன. பனையான்களை ஒரு குச்சியினால்ää கவனமாகப் பிரித்துக் கொண்டே மீனவன் கூவினான்.
“ஙா.. துடிக்கத் துடிக்க.. துடிக்கத் துடிக்க..”
துள்ளிய சுங்கானின்ää தலையில் பாவ புண்ணியம் பார்க்காமல்ää ‘நச்’சென்று அடித்து நசுக்கிய மீனவன்ää “எடுங்க..எடுங்க.. ஆத்து மீன் எடுங்க.. போனா வராது.. கறி போனா வராது.. கிலோ எடுங்க கொறைச்சித் தாரன்.. கெலோ சுங்கான் நாநூறு.. பனையான் இருநூத்தம்பது.. கெளுத்தி சோடி முன்னூத்தம்பது.. செனைக் கெளுத்தி.. கறிக்கு சும்மா அந்த மாதிரி இரிக்கிம்.. ஓவ்…!
என்று எதிர்வு கூவினான். தவிரவும்ää ஆக்கி முடித்த பின்ää கெளுத்தி மீனின் தலையை எப்படி உறுஞ்சி உள்ளுறைவுகளைத் துப்புரவாக்க வேண்டும் என்று ஒரு செய்முறைப் பயிற்சியையும் முற்றிலும் இலவசமாகச் செய்து காட்டினான். றாபீக் மாஸ்டரின் வாய்க்குள் எச்சில் ஊறியது. கூடி நின்றோர் பேசாமல் விலை வைக்கப் பயந்து மீன் வகையறாக்களையே சும்மா பார்த்துக் கொண்டிருக்க ää அலுத்துப் போன மீனவன்ää
“சும்மா சும்மா விடுப்புப் பாக்காம கேளுங்களன்டா ஆக்களே..ய்... வாய்க்க என்ன முட்டடப்பனா..?”
என்று அவர்களை வலிந்து பேரத்துக்கு அழைத்தான். அவன் கையில் தை;திருந்த செங்கல்லுக்கும்ää அவனது செஞ்சொல்லுக்கும் பயந்து அனைவரும் பதிலின்றிப் புன்னகைத்தனர். றாபீக் மாஸ்டர் நன்றாக தலையை சனக் கூட்டத்துள் மறைத்துக் கொண்டார். அதுதான் ஆபத்தாயிற்று.. இவரது தலைமறைவைச் சட்டென அவதானித்த மீனவன். நேரடியாகää றாபிக் மாஸ்டரை நோக்கிää
“ஞா.. கணக்குச் சேர்.. முன்னுக்கு வாங்க..வெலாங்குமீனப் போல தலைய ஒழிக்காதீங்க.. நெல்ல கறி எடுங்க.. சுங்கான் அரக்கெலோ போடுவமா..? கெளுத்தி..? கடுகு போட்டு சொதி வெச்சா சாள வாய் ஊறும்.. ஏளு ஊட்டுக்கு மணக்கும்.. காக்கெலோ தரயா..?”
“இல்..ல.. வந்..தூ..”
“அப்ப.. பனையான்..? சதப் பளையான்.. அம்பட்டும் சதான்.. எறக்காமத்துச் சாமான்.. அரக்கெல போடயா..? பாருங்க சதைய..’
என்று ‘சட்டக்’கென ஒரு பனையான் மீனை இலாவகமாகப் பிடித்துää முகத்தினருகே அதன் வீச்சம் அடிக்கும் அளவுக்கு கொணர்ந்து காட்டிää நிருபணம் செய்தான். இதை எப்படிச் சமாளிப்பது..?
கூடிநின்ற சனங்கள் ஆஹா ஒரு ஏமாளி அகப்பட்டார் என்ற திருப்தியுடன்ää “பனையானைக் கேளுங்க மாஸ்டர்.. கெளுத்திக்கு கடசி வெலயக் கேளுங்க மாஸ்டர்.. கலவன் கும்பம் கடசியா ஒரு வெலயக் கேளுங்க சேர்..” என்று தத்தமது கேள்விகளையும் றாபீக்மாஸ்டரிடம் ஒப்புக் கொடுத்தனர். தாம் பாதுகாப்பாக விலகினர். அகப்பட்டுக் கொண்ட அதிர்ச்சிää முகத்தில் அப்பட்டமாகத் தெரியää முன்னுக்கு வந்த றாபீக் மாஸ்டர் உள்ளார்ந்த பயத்துடன்ää
“சரிசரி.. நியாயமா வெல சொன்னா.. சனம் வாங்கும்.. நீங்க மீனுக்குத் தங்கத்துக்கு வெல சொல்றாப்பல சொன்னா சனம் வெலகி ஓடத்தான் செய்யும்..” என்று ஒரு தன்னிலை விளக்கமளித்துவிட்டு “சனங்கள் தமக்குக் கட்டுப்படியாகிற விலைக்குத்தானே கேட்கும்கள்.... சரி.. இதுக்கு என்ன விலை..?” என்று குத்துமதிப்பாக ஆரம்பித்தார். இப்படி எத்தனையோ பேரைப் பார்த்துவிட்ட மீனவன்ää விலை ஏதும் சொல்லாமல்ää சும்மா சிரித்தபடிää தன் உதவிப் பையனிடம்ää
“டேய்ää மம்மத்தம்பி.. சேருக்குச் சுங்கான் போடுறா.. டே.. ஒரு அர” என்று கத்தினான். அவன் வீசிய வலையில் அவசரமாகச் சிக்கிக் கொண்டார் றாபீக் மாஸ்டர்.
“சேச்சே.. சுங்கான் வேணா.. பொறு.. பொறு..” வலையினின்றும் தப்பிக்கத் துடித்தார்.
“அப்ப இந்த ரெண்டு கெளுத்தியையும் கட்டிக் குர்ரோவ்.. சேருக்கு..” வலை மேலும் இறுகியது.
மாட்டிக் கொண்டு துள்ளிய மாஸ்டர் எதையோ சுட்டிக் காட்டித் தப்பிக்க முயன்று.
“ல்லல்லல்;லல.. முதல்ல இதுர கடசி வெலயச் சொல்லு.” . ஆனால் அவர் தெரியாத்தனமான சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது ஒரு பெரிய விரால் மீனை. றாபீக்மாஸ்டரின் அசாத்திய துணிவை வியந்து போன மீனவனும்ää கூடி நின்றோரும். “மாஸ்டருக்கு இண்டைக்குச் சம்பள நாளாக்கும்..” என்றும்ää “புது மாப்பிள்ள பொண்ணுக்கு மாஸ்டர் சாப்பாடுää கீப்பாடு குடுக்கப் போறாரு போல.. அதான் பெரிய விராலக் கேக்காரு..” என்றும்ää கற்பனை செய்துகொண்ட பொதுசனம் மீனவன் கூறப்போகும் விலையைக் கேட்டுத் தாம் மயக்கமுற தயார்படுத்திக் கொள்ள…
“ச்சா.. விராலா..? விராலா சேர் வேணும்..? இதுக்கெல்லாம் வெலகில கேக்கிறயா..சேர்.. உங்களப் போலத் ‘திண்டுகழிச்ச’ ஆக்கள் வில கேக்கிறயா..? ஊட்ட தங்கச்சி புள்ளத்தாச்சி..ல்லோ.. டெ படிச்சிக் கட்றா அந்த விரால....”
மீன்சார அதிர்ச்சியில் விதிர்விதிர்த்துப் போனார் மாஸ்டர்... இப்ப என்ன செய்ய..? இப்ப என்ன செய்ய..? எப்படித் தப்பிக்க..? என்ன உத்தி..? என்ன கணக்குப் போட..? என்ன திருப்பம் நிகழ்ந்து நான் இவ்விடத்தினின்றும் தப்பித்தல் கூடும்..?
ஆனால் மீனவன் அகமகிழ்ந்து போய் ‘சடக்’கென அந்தப் பெரிய விரால் மீனை எடுத்துää அது இருபக்கமும் நெளிந்து துடிக்கத் துடிக்கää இரக்கமற்று அதன் மூக்கினுள் ஈர்க்குச்சி ஒன்றைச் ‘சரக்’கெனக் குத்தி மறுஓட்டையால் இழுத்து முடிச்சிட்டு பாதுகாப்பாகத் தூக்கிச் செல்லும் வண்ணம் தூக்கிக் காட்டினான். நீட்டினான். பைக்குள்ளிருந்த நூற்றிஐம்பது ருபாய் பணத்துடன் சேர்த்து இதயத்தைப் பொத்திக் கொண்டார் றாபீக் மாஸ்டர். மீனவன் பரபரவென ஒரு ‘சொப்பிங்பேக்’கைப் பிரித்து அதனையிட்டு மகிழ்ச்சிப்; பெருக்குடன் அவரிடம் நீட்டிää
“ஹஙாhங்.. வெரால் போய்ட்டுது. சுப்பர் கறி.. வெல கேக்காம சும்மா பாத்துப்பாத்து நிண்டாக்களுக்கு கறி கெடைக்க மாட்டா.. நெல்ல கறி திங்கிற சேரைப் போல மனிசன் வரணும்.. ஓவ். மாஸ்டர்.. ந்தாங்க புடிங்க.. வெரால்.. நீங்க துணிஞ்சி கேட்டதுக்காக எளுநூறுவாக்குக் கேட்டும் நான் குடுக்கல்ல.. ஒங்களுக்காக அம்பதக் கொறச்சிட்டு அறுநூத்தம்பது றுவாத் தாங்க மாஸ்டர்.. புடிங்க.. புடிங்க.. சொணங்கினா வேறாக்கள் கேட்டுடப் போறாங்க.. ம்ää.. புடிங்க..”
என அவசரப்படுத்தினான். வெலவெலத்துப் போன றாபீக்மாஸ்டர் தான் சிந்திப்பதற்காகவும்ää அவனைச் சற்றுத் தாமதிக்க வைப்பதற்காகவும். தன் பையினுள் கைவிட்டுää அங்கிங்கெனாதபடி எங்கும் சும்மா துளாவிக் கொண்டிருந்தார். ஆளடையாள அட்டையை வெளியிலெடுத்து மறுபடி உள்வைத்து முதலில் நூறு ரூபாயை எடுத்துக் காட்சிப்படுத்தி விட்டு மறுபடி பையினுள் துளாவினார். சட்டியில் இருந்தாலல்லவா அகப்பையில் வர.. காசை மறந்துபோய் வந்து விட்டேனப்பா என்ற தனது கடைசி ஆயுதத்தை கையாள்வதற்குத் துணிந்தார். அதைச் சொல்வதற்கான வழியில் நேரத்தைக் கடத்தினார். ஆனால்ää அவரின் தாமதம் மீனவனின் பொறுமையையும்ää கோபத்தையும் சோதித்துக் கொண்டிருந்தது. கூடி நின்ற சனங்கள் றாபீக்மாஸ்டரைப் பரிதாபமாகப் பார்க்க அவருக்குள் கௌரவப் பிரச்சினை பற்றி எரிந்தது. இப்ப என்ன செய்ய.. என்ன செய்ய..?
“என்ன மாய்ட்டர்..? பக்கட்டப் பக்கட்ட போட்டுப் பெனையிற..? காசி..ல்லியா..? காசில்லாம மீம் வாங்க வந்தயா..? ஹிக்கிக்கீஹ்;ஹ.. அதுவும் வெரால் மீன..?”
மீனவன் நிர்த்தாட்சண்யமாக ஆரம்பித்தான். றாபீக்மாஸ்டர் மகா ஆத்திரத்தடன்ää வாய் குளறிப்போயிருக்க தெய்வமே நேரில் வந்தாற்போல் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. அவ்விடத்தில்ää முச்சக்கர வண்டியில் அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒரு முதியவர் தன் ஒற்றைக்கையால் சக்கரத்தை உருட்டிக் கொண்டே கூட்டத்துள் புகுந்து வந்தார். றாபீக்மாஸ்டரைத் தன் முச்சக்கர முன் சக்கரத்தால்ää சற்றே முட்டித் தள்ளி விட்டு அந்தப் பிச்சைக்காரர் மாஸ்டரின் பச்சடித்துப் போயிருந்த முகத்தையும்ää மீனவனின் கர்ணகடூரமான கெளுத்திக் கண்களையும் மாறிமாறிப் பார்த்து.. சற்றே புன்னகைத்தார். பின் மீனவனிடம்ää
“என்ன மம்மது..? அந்த விராலக் குடுத்துட்டியா..? ல்லாட்டி எனக்கித் தாவன்.. எவ்வளவு..?’ என்றார். றாபீக் மாஸ்டரின் காதுக்குள் தேன்மதுரத் தமிழோசை கேட்டது. அக்கணமே மீனவன் கட்சி மாறி..
“விரால் திங்கிற மனிசனப் பாத்தாத் தெரியிம்.. எளுநூறுவாக் காசிக்கி பக்கட்டப் போட்டுப் பெனையிற ஆக்கள் விலகுங்க.. வெலகு.. வெலகு.. இந்தாங்க முதலாளி..” என்று பிச்சைக்காரரின் பதவி அந்தஸ்தை ஒரேயடியாகக் கூட்டிவிட்ட மீனவன்ää விலையையும் மேலும் ஐம்பது ரூபாயாகக் கூட்டிää
“இந்தக் காலத்துல எளுநூத்தம்பது ரூவால்லாம் ஒரு காசா..?’ என்றவாறேää சற்றும் தாமதிக்காதுää இன்னுமொரு ‘சொப்பிங்பேக்’கினுள் விராலைச் சுற்றி பிச்சைக்காரரின் முச்சக்கரவண்டி முன்னிடத்தில் கொணர்ந்து பவ்வியமாக தாழ் பணிந்து வைத்தான்.
_வெரால் மீன் சினைய தனிய பொரிக்கனும்... நடு வகுத்து சதைய எண்ணையில ரோஸ்பண்ணி வெங்காயம் பச்சசொச்சிக்கா போட்டு சாடயா பெரட்டி எடுக்கனும்.. மத்தத்துண்டுகள கடுகு போட்டு ஒரு ஆணம் வெச்சா நாப்பது ஊட்டுக்க மணக்கும்.. தலைய தனியா உறிஞ்சணும்... அதோடயே ரெண்டு பிங்கான் சோறு திங்கலாம்... .. சுப்பரா இரிக்கும்... என்ற பிச்சைக்காரர் தன் அழுக்குச் சீலைப் பைக்குள்ளிருந்துää பத்துää இருபதுää ஐம்பது கட்டுக்களாக ஒரு நோட்டுக் கற்றையை உருவிää “ந்தா எள்நூத்தம்பது.. புடி:” என்று விசிறினார். இருகைநீட்டிப் பெற்றுக் கொண்ட மீனவன் எச்சில் ஊறிய வாயைக் கூட்டி விழுங்கியபடியே பிச்சைக்காரரின் முச்சக்கரத்தை அவருக்குதவியாகக் கொஞ்சமாகத் தள்ளியும் விட்டான்.
பிச்சைக்காரரின் இராச்சாப்பாடு வர்ணணையில் வாய் ஊறியிருந்த சனம் பொறாமைக் கண்களுடன் ஒருவரையொருவர் நோக்க- இந்த உச்ச திருப்பக் காட்சியைப் பார்த்து அசந்து போயிருந்த றாபிக் மாஸ்டர் மீன்காரன் திரும்பவும் தன் மீதே திpரும்புவான் என்ற திடீர் ஞானோதயத்தில்ää அவ்விடத்திலிருந்து. அசாதாரன வேகத்துடன்ää நழுவித் தலைமறையும் போதுää மீனவன் தன் செஞ்சொற்களால் சொன்னது கேட்காமலில்லை. தவிரவும்ää அவனது மீனவச் சொற்களுக்குள் வாழ்க்கையின் தத்துவமும் அடங்கியிருந்ததை உணரவும் முடிந்தது.
“ந்தா.. விரால் மீனுக்கு வெல கேட்டும் வாங்காமää அந்தா மரக்கறிப்பக்கம் ஓடுர கணக்கு மாஸ்டருக்கு மட்டுமில்லடா ஆக்களே.. வவ்த்துல புள்ளக்காரிக்கும்.. இந்த விராலப் புடிச்சவனுக்கும்ää இத வாங்கி விக்கிற எனக்கும்தான் விரால் மீன் சாப்பிடக் கட்டுப்படியாகாது. இத வித்து என்ட கடன அடச்சிட்டுää இரவைக்கிச் சுண்டலோட சோறு திண்டுட்டுப் படுப்பன்… பிச்சை எடுக்கிற இந்த ஆள் ராச்சாப்பாட்டுக்குக் கூட விரால் மீன் பொரியல்.. என்டால்ää இதென்ன புதினமான கணக்கு.. ஆரு போட்ட கணக்கு..? விளங்குதா கணக்குப் பாடம் எடுக்கிற மாஸ்டரே..ய்..?”0.(2011)